எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடிலெய்டு, பிப்.- 13 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற நிலையில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் 1 - 1 என்ற நிலையில் சமன் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா - இலங்கை நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்ற நிலையில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நேற்று அடிலெய்டில் மோதின. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் வினய்குமார். 6 ரன்களை எடுத்திருந்த ரிக்கி பாண்டிங், வினய் பந்தில் விராட் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி.யின் ஸ்கோர் அப்போது 14 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களமிறங்கினார். வார்னர்- கிளார்க் ஜோடி மெதுவாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிலும் கிளார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியபோது 18 ரன்களை எடுத்திருந்த வார்னர், அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக கிளார்க்குடன் அறிமுக வீரர் ஃபாரஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் விளையாடி ரன்களை உயர்த்தியது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய கிளார்க் 38 ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் மித வேகமாக வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 81 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். ஃபாரஸ்ட் மற்றும் ஹஸ்ஸி ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதிலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய ஃபாரஸ்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதலாவது அரை சதத்தை கடந்தார். 71 பந்துகளில் இவர் அரை சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியும் அரை சதம் கடந்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 35.3 ஓவர்களில் 179 ஆக இருந்தபோது 66 ரன்களை எடுத்திருந்த ஃபாரஸ்ட், உமேஷ் யாதவின் பந்தில் வினய்குமாரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹஸ்ஸியுடன், கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த ஹஸ்ஸி, ஜாஹீர்கான் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 72. அப்போது ஆஸ்திரேலிய அணி 44.2 ஓவர்களில் 235 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வாடே இம்முறை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இவரும் கிறிஸ்டியனும் இறுதிக் கட்டத்தில் அதிரடியைக் காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் வினய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாஹீர்கான் 1விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்தியது இந்திய அணி. இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் துவக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. அணி 52 ரன்களை கடந்தபோது அதிரடி வீரர் சேவாக் 20 ரன்களை எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் விராட் ஹோலி களமிறங்கினார். இம்முறை ஹோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஃபாரஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து காம்பீருடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. காம்பீர் அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸின் பந்தில் ஸ்டார்க்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அருமையாக விளையாடிவந்த காம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து அணித் தலைவர் தோனியும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 46.1 ஓவரில் அணியின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தபோது ரெய்னா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோகர்த்தியின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இவர் 8 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் தோகர்த்தியால் அவுட் ஆக்கப்பட்டாலும் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெக்கே 3 விக்கெட்டையும், தோகர்த்தி 2 விக்கெட்டையும், ஹாரிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 92 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட காம்பீர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.