எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடிலெய்டு, பிப்.- 13 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற நிலையில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் 1 - 1 என்ற நிலையில் சமன் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா - இலங்கை நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்ற நிலையில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நேற்று அடிலெய்டில் மோதின. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் வினய்குமார். 6 ரன்களை எடுத்திருந்த ரிக்கி பாண்டிங், வினய் பந்தில் விராட் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி.யின் ஸ்கோர் அப்போது 14 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களமிறங்கினார். வார்னர்- கிளார்க் ஜோடி மெதுவாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிலும் கிளார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியபோது 18 ரன்களை எடுத்திருந்த வார்னர், அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக கிளார்க்குடன் அறிமுக வீரர் ஃபாரஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் விளையாடி ரன்களை உயர்த்தியது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய கிளார்க் 38 ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் மித வேகமாக வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 81 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். ஃபாரஸ்ட் மற்றும் ஹஸ்ஸி ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதிலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய ஃபாரஸ்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதலாவது அரை சதத்தை கடந்தார். 71 பந்துகளில் இவர் அரை சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியும் அரை சதம் கடந்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 35.3 ஓவர்களில் 179 ஆக இருந்தபோது 66 ரன்களை எடுத்திருந்த ஃபாரஸ்ட், உமேஷ் யாதவின் பந்தில் வினய்குமாரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹஸ்ஸியுடன், கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த ஹஸ்ஸி, ஜாஹீர்கான் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 72. அப்போது ஆஸ்திரேலிய அணி 44.2 ஓவர்களில் 235 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வாடே இம்முறை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இவரும் கிறிஸ்டியனும் இறுதிக் கட்டத்தில் அதிரடியைக் காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் வினய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாஹீர்கான் 1விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்தியது இந்திய அணி. இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் துவக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. அணி 52 ரன்களை கடந்தபோது அதிரடி வீரர் சேவாக் 20 ரன்களை எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் விராட் ஹோலி களமிறங்கினார். இம்முறை ஹோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஃபாரஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து காம்பீருடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. காம்பீர் அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸின் பந்தில் ஸ்டார்க்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அருமையாக விளையாடிவந்த காம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து அணித் தலைவர் தோனியும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 46.1 ஓவரில் அணியின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தபோது ரெய்னா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோகர்த்தியின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இவர் 8 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் தோகர்த்தியால் அவுட் ஆக்கப்பட்டாலும் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெக்கே 3 விக்கெட்டையும், தோகர்த்தி 2 விக்கெட்டையும், ஹாரிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 92 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட காம்பீர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்