எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், ஏப். 29 - மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக நித்யானந்த சுவாமிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 292 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பெங்களூர் பிடதியில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தன் வாரிசாகவும், மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாகவும் நித்யானந்த பீடத்தின் பீடாதிபதி நித்யானந்தாவை நியமிப்பதாக ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் அறிவித்தார். ஆதீனப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு அடையாளமாக நித்யானந்தாவிடம் தங்க செங்கோலை அளித்து, தங்கக் கிரீடத்தை சூட்டினார் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். இதற்கான உறுதிமொழி பத்திரத்தையும் நித்யானந்தாவிடம் அவர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
மதுரை ஆதீனத்தின் தோற்றம் தெரியவில்லை. எனினும் தென்னிந்திய சைவ சித்தாந்த தத்துவத்தின் நான்கு துறவிகளில் ஒருவராக அறியப்படும் திருஞானசம்பந்தர், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனத்தை புணரமைத்தார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன. மதுரை ஆதீனத்தின் விதிகள் மற்றும் கோட்பாடுகளின்படி சைவ வேளாளர்கள்தான் மதுரை ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருக்க வேண்டும். இப்பொறுப்பை ஏற்பவர் திருஞான சம்பந்தரின் புனித பணிகளை தொடர வேண்டும்.
என் கனவில் சிவ பெருமான் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சன்னிதானமாக நித்யானந்தரை நியமிக்குமாறு அருள்பாலித்தார். நித்யானந்தரை 2 முறை சந்தித்து அவரது செயல்களை கவனித்தேன். திருஞானசம்பந்தரை போல கொடை வள்ளலாகவும், ஆற்றல் வாய்ந்தவராகவும் இருப்பதால் அவரை குருமகா சன்னிதானமாக நியமிக்க முடிவு செய்தேன். மதுரை ஆதீனத்தை நித்யானந்த சுவாமிகள் பன்னாட்டு அளவில் புகழ் பெற செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெகு விரைவில் மதுரையில் பட்டம் சூட்டு விழா நடைபெறும். எனவே மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக பரமஹம்ச நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகளாக பிரகடனம் செய்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து பேசிய நித்யானந்தா,
சொக்கநாதர், மீனாட்சி அம்மன், திருஞானசம்பந்தரை சாட்சியாக வைத்து மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். சைவ சித்தாந்த தத்துவத்தை மீண்டும் எழுச்சி கொள்ள செய்வேன். மதுரை ஆதீனத்தை பன்னாட்டு அளவில் உயர்த்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனத்தின் ஆன்மீக பணிகளுக்கு ஒரு கோடி ரூபாயை காணிக்கையாக அளிக்கிறேன். மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும். இக்கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்பை நான் ஏற்பது குறித்து யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அதை எதிர்கொள்வேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.