எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசு அறிவித்தபடி நேற்று மாலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மேலும் மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பிளஸ் 1 தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
144 தடை அமல்
இதனிடையே தமிழகத்தில் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. டீக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்த அரசு, அதே நேரம் டீக்கடைகளில் கூட்டம் கூடக் கூடாது என்றும் அறிவித்தது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் வாங்கி செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதே நேரம் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அரசு அறிவித்தது.
வந்தது விழிப்புணர்வு
இந்த நிலையில் நேற்று மாலை அரசு அறிவித்தபடி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அதையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. கடந்த ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட போது கூட மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் 144 தடை உத்தரவு என்று அரசு அறிவித்ததும் மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது. அந்த அச்சத்தின் விளைவாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். அரிசிக் கடைகளிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதியது. தங்களால் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். 6 மணிக்கு 144 தடை அமல் என்பதை உணர்ந்து அதற்கு முன்பே தங்கள் வீடுகளை நோக்கி மக்கள் பறந்தனர். ஊரடங்கு உத்தரவின்போது கூட மக்கள் மாஸ்க் அணிந்ததை அவ்வளவாக காண முடியவில்லை. ஆனால் நேற்று பஸ்களிலும், சாலைகளிலும் சென்ற மக்கள் மாஸ்க் அணிந்து சென்றதை காண முடிந்தது. கொரோனாவின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொண்டதையே இது காட்டுகிறது. ஊரடங்கு உத்தரவிற்கும், 144 தடை உத்தரவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. ஆனால் 144 தடை உத்தரவின் போது 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என்பதுதான் விதி. இதை பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாரும் புரிந்து கொண்டு பொதுமக்களிடத்தில் நல்ல முறையில் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே தவிர அடக்குமுறையை கையாளக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


