எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பாராட்டியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு என்ற வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக தாங்கள் எடுத்து வரும் தீர்க்கமான துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடிய வைரசில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். தமிழகமும் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதை திறம்பட செயல்படுத்தவும் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் தொடரவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட , தனிமைப்படுத்தும் வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக நீங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நாட்டுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றி. தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக தமிழக அரசு 10 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கி உள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய சாதனங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
21 நாட்கள் ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து சமீபத்தில் சில நிவாரண உதவிகளை நான் அறிவித்தேன். 144 தடை அமலில் இருப்பதால் ரூ. 3,280 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ரேசனில் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீடிக்கும் என்று தங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பாதிக்கும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். அவர்களிடம் சேமிப்பும் குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் துயரங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்காக தமிழகம் மாதம் ஒன்றுக்கு ரூ. 400 கோடி சம்பளம் ஒதுக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் கருதி இந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக குறைந்தபட்சம் ரூ. 500 கோடி ஒதுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்புசாரா துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் இந்த முழு அடைப்பால் இன்னலுக்கு ஆளாக நேரிடும். அதை கருதி அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரமும், 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு ரூ. 500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே இந்திய உணவு கழகத்தில் உணவு தானியங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்துவதை குறைந்தபட்சம் 2 காலாண்டுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த சிறு, குறு வியாபாரிகளுக்கான வட்டி மற்றும் அபராதத்தை 2 காலாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்திற்கு அவசர நிதி தேவைப்படுகிறது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துயரத்தை தீர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி