எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகிவிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்க தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலெக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் பேட்டி
கூட்ட முடிவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதனை தடுக்க அரசு முழு வீச்சுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இன்றும் ஆலோசனை நடத்தினேன். அரசு சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். அனைத்து கலெக்டர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
571 பேருக்கு பாதிப்பு
இன்று வரை தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்து 541 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 814 பேருக்கு 28 நாள் வீட்டு கண்காணிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் 621பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 11 ம், தனியாரிடம் 6 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதுதவிர மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதனையும் சேர்த்து மொத்தம் 38 ஆய்வகங்கள் செயல்படும் நிலை இருக்கும். இதன் மூலம் வேகமாக துரிதமாக பரிசோதனை நடக்கும். 3,371 வெண்டிலேட்டர்கள் இப்போது உள்ளன. தேவையான முக கவசங்களும் மருத்துவ உபகரணங்களும் உள்ளன.மேலும் 2 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய இன்று ஆர்டர் கொடுத்துள்ளோம்.
ரேபிட் சோதனை உபகரணங்கள்
ரேபிட் சோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உபகரணங்கள் 9 -ந் தேதி கிடைத்து விடும். 10 - ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன்.வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கக் கூடிய தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை வழக்குகள்
ஊரடங்கு மற்றும் தடை உத்தரவை மீறியதாக 94 ஆயிரத்து 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 94 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு முதல் கட்டமாக 500 கோடி தந்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதி உள்ளது. முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொற்று நோய் அதிகரித்து வருகிறதே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இந்த நோயின் தாக்கம், வீரியம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களான நீங்களும் சொல்கிறீர்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்தினால் இந்த நோய் வராது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான். எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.தொற்று நோய் எளிதாக பரவக் கூடியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அறிகுறி தெரியாமலும் வருகிறது
கொரோனா நோய் அறிகுறி தெரியாமலேயே பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இதனை கடைப்பிடித்தால் பரவுவதை தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டம் கொண்டு வருவது மக்களை துன்புறுத்த அல்ல, மக்கள் நலன் கருதித்தான் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டம் போடுகிறோம். அதனை நடைமுறைப்படுத்துவது மக்கள் தான் என்றும் அவர் கூறினார்.
நடமாட்டத்தை குறைக்க வேண்டும்
மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறோம். படிப்படியாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை அரசு செய்கிறது.நோய் வருவது இயற்கை. வந்தால் அதனை குணப்படுத்துவது நமது கடமை. நோய் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் குடும்பத்தை காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது ?
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளித்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.மேலும் அரிசி, ரேசன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் காய்கறி கடைகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
17 Jul 2025பெங்களூரு, கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
17 Jul 2025திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
இந்திய அணிக்கு கோலி மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் வேண்டுகோள்
17 Jul 2025மும்பை: இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரரான மதன் லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4-வது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும்: இர்பான்
17 Jul 2025மான்செஸ்டர்: 4-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விருந்தோம்பல் சேவையை சிறப்பாக நடத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
17 Jul 2025சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.