எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (7.7.2020) சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு மருத்துவ உபகரண வசதிகளுடன் 750 படுக்கைகள் கொண்ட அரசு கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 136 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையானது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசு கொரோனா மருத்துவமனையாக 750 படுக்கைகளுடன் அதிநவீன சிறப்பு மருத்துவ உபகரண வசதிகளுடன் போர்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசால் இரண்டே வாரத்தில் கொரோனா மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக நான்கு தளங்களுடன், அதிநவீன மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா மருத்துவமனை, மருத்துவ ஆக்ஸிஜனுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்காக 60 படுக்கைகள் மற்றும் 40 எண்ணிக்கையிலான சிறப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மருத்துவமனையின் பகுதி அடித்தளத்தில் (semi basement), வரவேற்பு அறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் இரத்த சேமிப்பு அறை ஆகியவையும், தரைத்தளத்தில் CT Scan, Ultra Sonogram ECHO, X-ray, Ventilator, High Flow Nasal Cannula போன்ற அதிநவீன மருத்துவ உபகரணங்களும், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அனைத்து மருத்துவ உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளும், மூன்றாம் தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி மேற்கொள்ள பிரத்யேக கூடம், கொரோனா நோயாளிகள் காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்கும் வசதி, உறவினர்களுடன் பேச அதிநவீன WIFI வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, தொற்று பரவாமல் இருக்க எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அமைந்துள்ள அதிநவீன உபகரணங்களுடன் இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இங்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வல்லுநர் குழுவில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் மாற்றுப்பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வல்லுநர் குழுவில் உள்ளோர் ஒவ்வொரு நோயாளியின் கொரோனா தொற்றின் தன்மைக்கேற்றவாறு கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவம் பெற்றவர்கள்.
சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்படுதலை கண்காணிக்க நிர்வாகத் திறன் வாய்ந்த மூத்த மருத்துவர்களும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அம்மூத்த மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சை ஆரம்பம் முதல் இறுதி வரை வல்லுநர்கள் குழு சீரிய முறையில் செயல்பட வழிகாட்டியாய் செயல்படுவார்கள்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.


