எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஆனால், அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது. பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு 13.1.2020 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.
அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண். 596 / 2015) நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது. இப்பொருள் தொடர்பாக கடந்த 6.6.2020 அன்று தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) சுப்ரீம் கோர்ட்டி்ல தனியாக ஒரு வழக்கு (வழக்கு எண்.552/2020 ) தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை ஐகோர்ட்டினை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஐகோர்ட்டிலும் தனியாக ஒரு வழக்கு (எண் 8361/2020) கடந்த 16.6.2020 அன்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, சுப்ரீம் கோர்ட்டிலும், 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020) 2.7.2020 அன்று தொடர்ந்து, மேற்படி வழக்கும் 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அம்மாவும், அவரைத் தொடர்ந்து முதல்வரும், ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கூட (8.7.2020) தமிழக முதல்வர் பாரத பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்ததுவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வளமான பிரிவினருக்கு (Creamy layer) வழங்கப்படுவதில்லை. வளமான பிரிவினர் (Creamy layer) அளவு கோல்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு அளவு கோல். அதன் படி பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக உள்ளது. இந்த வருமானத்தை கணக்கிடும் போது, இதுவரை ஊதியம் (Salary) மற்றும் விவசாயம் (Agricultural)வருமான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதில் அம்மாவும், அம்மாவின் அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல் குழு வழக்குகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததால், 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, அம்மாவின் அரசு 1993-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான சட்டத்தினை நிறைவேற்றியது. பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 31பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45 /1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை ((Creamy layer) நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் (Salary) மற்றும் விவசாய (Agriculture) வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பாரத பிரதமரை முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.
அம்மாவின் அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். அம்மாவின் வழியில் அம்மாவின் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை
12 Sep 2025திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சுரங்கத் திட்டங்களுக்கு கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு: குறிப்பாணையை உடனே திரும்ப பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
12 Sep 2025சென்னை : சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள குறிப்பாணையை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடித
-
மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
12 Sep 2025சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
முதலையுடன் மல்யுத்தம் செய்த அமெரிக்கர் கைது
12 Sep 2025கான்பெரா : முதலையுடன் அமெரிக்க கைதி மல்யுத்தம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மும்பை நகரை பம்பாய் என்று அழைப்பதா? - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
12 Sep 2025மும்பை : மும்பை நகரை பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
12 Sep 2025புதுடெல்லி, சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அவதியடைந்தனர்.
-
10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும்; சீமான்
12 Sep 2025சென்னை, 10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும் என்று சீமான் கூறியுள்ளார்.
-
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றது தமிழ்நாட்டிற்கு பெருமை: இ.பி.எஸ்.
12 Sep 2025சென்னை, இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
பயன்பாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
12 Sep 2025அரியலூர் : 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
ராகுல்காந்தி மீது சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டு
12 Sep 2025புதுடெல்லி, பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல்காந்தி மீறுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்
12 Sep 2025சுரண்டை : ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.