எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுகாத்தி, ஜுலை - 2 - ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பிஜு ஜனதாதளம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நேருக்கு நேர் களம் காண்கிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று சங்மா உறுதியாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஏ.சங்மா, ஜனாதிபதி தேர்தல் கட்சி சார்பாக நடத்தப்படும் தேர்தல் அல்ல, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் எதுவும் ஒதுக்கப்படாது. எம்.பி.க்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ கட்சிகளின் கொறடாக்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி மிகவும் ரகசியமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும், பிரணாப்பும் எந்த கட்சிகளையும் சாராதவர்களாக உள்ளோம். ஏனெனில் நாங்கள் இருவருமே அவரவர் சார்ந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் என்னை முன்மொழிந்துள்ளனர். மேலும் தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம், சிவசேனா போன்ற சில கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் எனக்கு ஆதரவளித்துள்ளன. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறத் தேவையான ஓட்டுக்கள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை 9 முறை பாராளுமன்றத்திற்கும், இரண்டு முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் போட்டியிட்ட எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளேன். அதேபோல் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெறுவேன். ஜனாதிபதி தேர்தலின் முடிவு வந்தபிறகுதான் எனக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அனைவரும் ஆச்சரியப்பட இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள கட்சிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் ஆதரவை கோரியிருக்கிறேன். அவர் தமது கட்சி நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விரைந்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அசாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோ லேண்ட் மக்கள் முன்னணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் எனக்கு அதிசயங்கள் அற்புதங்கள் மீது நம்பிக்கையுண்டு. அதே நேரத்தில் அந்த நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது கடுமையான உழைப்பும் வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் கடுமையாக பாடுபட்டு வருகிறேன். எனென்றால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி என்றும் சங்மா தெரிவித்தார். அசாம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா, மத்திய அமைச்சராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


