எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆகஸ்டு 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையின் போது, நகராட்சி சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அப்போது உரையாற்றிய அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்தப் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த 12-ம் தேதி தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் , இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்
11 Aug 2025விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
-
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் நியமனம்
11 Aug 2025மும்பை : 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பி.சி.சி.ஐ.
-
உளுந்தூர்பேட்டை அருகே அதிசயம்: மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி
11 Aug 2025கள்ளக்குறிச்சி, உளுந்தூர் போட்டை அருகே மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் பீதி.
-
நவம்பர் 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
11 Aug 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Aug 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்
11 Aug 2025நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார்.
-
செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
11 Aug 2025காஸா : செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஜெர்மன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டம்
11 Aug 2025சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
-
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை
11 Aug 2025சென்னை : கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
11 Aug 2025திருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தூய்மை பணியாளர்கள் சந்திப்பு
11 Aug 2025சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் த.வெ.க. தலைவருடன் விஜயுடன் தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் ரோடு ஷோ
11 Aug 2025உடுமலை, உடுமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். பொதுமக்கள் திரண்டுவந்து உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
-
வாக்குத் திருட்டு முறைகேடு விவகாரம்: சுதந்திரமான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Aug 2025சென்னை, ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் மோசடியை அம்பலப்படுத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க.
-
தொடர்ச்சியாக 9 வெற்றிகள்: டி-20 போட்டியில் ஆஸி., சாதனை
11 Aug 2025மெலபோர்ன் : டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
11 Aug 2025துருக்கி, துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.
-
திருப்பூர் மாவட்டத்திற்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11 Aug 2025உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தந்தைக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்
11 Aug 2025நெல்லை : கவின் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளிததுள்ளார்.
-
சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
11 Aug 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உருவாகியுள்ள “சிறை” படத்
-
அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை ஆக.26-ம் தேதி முதல் துவக்கம்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
11 Aug 2025சென்னை, அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால் தகர்ப்போம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்
11 Aug 2025வாஷிங்டன், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் என்று பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பேசினார்.
-
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது ஒரு ஜனநாயக படுகொலை : உத்தவ் தாக்கரே கண்டனம்
11 Aug 2025டெல்லி : எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதால் ஜனநாயகத்தின் படுகொலையை உலகம் கண்டுள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா கைது
11 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும்: ரோகித் சர்மா, கோலிக்கு பி.சி.சி.ஐ. அறிவுறுத்தல்
11 Aug 2025புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்ட