எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சார்ஜா : எங்கள் அணி வீரர்கள் தங்களின் பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு விளையாடினார்கள், அவர்களின் கடின உழைப்பு வெற்றிக்கு காரணம் என்று சி.எஸ்.கே கேப்டன் டோனி புகழாரம் சூட்டினார்.
சி.எஸ்.கே வெற்றி...
ஷார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் டி-20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடின உழைப்பு...
எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அணியில் தங்களின் பங்கு என்ன, பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். இங்குள்ள 3 மைதானங்களுமே வித்தியாசமானவை. இதில் ஷார்ஜா மைதானம் மிகவும் மெதுவான ஆடுகளம். துபாய், அபுதாபி ஆடுகளம் வேறுபட்டவை. அதற்கு ஏற்றார்போல் வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்
பனிப்பொழிவு...
டாஸ் வென்றபோது இங்கு பனிப்பொழிவு இருந்தது. அதனால்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தோம். எப்போதெல்லாம் பனிப்பொழிவு இருக்கிறதோ அப்போது நாங்கள் 2-வது பேட்டிங் செய்யவே விரும்புவோம். ஆர்.சி.பி அணி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள், ஆனால், 9-வது ஓவருக்குப்பின் ரன்ரேட் குறையத் தொடங்கியது.
அபார பந்துவீச்சு...
இன்னும் நாங்கள் நெருக்கடி கொடுத்து பந்துவீசியிருக்கலாம். இதில் படிக்கல் ஒருமுனையில் பேட்டிங் செய்தபோது, ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கியமானதாக இருந்தது. பிராவோ, ஜோஷ், ஷர்துல், தீபக் சஹர் ஆகியோரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. எந்த பந்துவீச்சாளர் எந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தலாம் என்பது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
நிறுத்திவைப்பேன்...
தேநீர் இடைவேளைக்கு முன்பாக மொயின் அலியிடம், நீங்களும் விரைவாக பந்துவீச வேண்டியது இருக்கும். கோலி, படிக்கல் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தேன். ஆர்.சி.பி தொடக்கம் வலுவாக இருந்தது. ஆனால், பிராவாவோவுக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவுசெய்தேன். பிராவோவுக்கு பந்துவீச தாமதித்தால் கடினமான நேரத்துக்கும், கடைசி ஓவர்களை வீசவும் அவர் தேவை என்பதற்காகவே நிறுத்திவைப்பேன்.
கடினமானது...
இந்த ஆடுகளத்தில் தடுப்பு ஆட்டம் ஆடுவது கடினமானது, ஆனால், ஆர்சிபி அணி அதிகமான பவுண்டரிகளை அடித்தார்கள். இந்த ஆடுகளத்தில் வலது, இடது பேட்ஸ்மேன்கள் கூட்டணி முக்கியமானது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் பணியை உணர்ந்து விளையாடுவார்கள் என்ற நினைக்கிறேன். அதனால்தான் வலது, இடது பேட்டிங் வரிசையில் வீரர்களை களமிறக்கினோம். இவ்வாறு டோனி தெரிவித்தார்.
கோலி பேட்டி...
தோல்வி குறித்து ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி தெரிவிக்கையில்., போட்டி நிறைவடைந்த பிறகு எங்களால் 175 ரன்களைக் குவித்திருக்க முடியும், அப்படி ஒரு இலக்கை வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 12-ம் கனமழை: வானிலை ஆய்வு மையம்
08 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மும்பை-லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
08 Nov 2025மும்பை : மும்பை - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
-
புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளில் குளறுபடி அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
08 Nov 2025புதுச்சேரி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 69 ஆயிரம் பேர் பலி
08 Nov 2025காசா சிட்டி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு: தென் மாவட்ட ரயில் சேவை மாற்றம்
08 Nov 2025சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.


