எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.8 - நடிகர் கமல்ஹாசனின், ``விஸ்வரூபம்'' படம் டி.டி.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு திரையுலகை காப்பாற்றவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-
நம்முடைய திரைஉலகத்தின் மூத்த சகோதரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பிலும் வைக்கும் பணிவான வேண்டுகோள்:
பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கும், திரையரங்க உரிமையாளர்களின் சார்பாக அபிராமி ராமநாதனின் விடுக்கும் செய்தி:-
நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் தன் ``விஸ்வரூபம்''படத்தை டிடிஎச் மூலம் திரையிடுவது பற்றி பல சந்தேங்கள் இருந்ததால் மதுரையில் இருந்த கமல்ஹாசன் அவர்களுடன் டெலி கான்பரன்சிங் மூலம் பல சந்தேகங்கள் கேட்டனர். அதில் அவர் கொடுத்த விளக்கங்கள் கீழ் வருமாறு:-
1. விஸ்வரூபம் படம் டிடிஎச் முறையில் ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும்.
2. அப்படி திரையிடும்போது திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒரு நாள் முன்பு இரவு 9.00 மணிக்கு மேல் திரையிடப்படும்.
3. இதற்கு ஒரு டிடிஎச் கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ. 1000/- வசூல் செய்யப்படும்.
4. இது அவருடைய படத்திற்கு டிரைலர் போன்று இருக்கும். இதைப் பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு அவர் கூறியதை வைத்து விவாதித்த போது மேலும் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின. அவற்றுள் சில:
1. ஒரு டிடிஎச் கருவிக்கு ஒரு குடும்பம் தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது.
2. இந்த டிடிஎச் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டை ஹோட்டல்கள் மற்றும் கிளப்கள் முதலியவற்றில் காண்பிப்பது போல் இதையும் காண்பித்து விட்டால் ஒவ்வொரு டிடிஎச்சையும் பல நூறு பேர்கள் பார்ப்பார்கள். உதாரணமாக ஒரு கிளப்பில் இப்படத்தை திரையிட்டால் பெரிய கிளப்களில் 3000, 4000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வந்து இதை பார்ப்பார்கள். டிவி க்களும் தற்போது 52 இஞ்ச்களில் கிடைக்கிறது. அத்துடன் இந்த டிடிஎச் கம்பெனிகாரர்கள் ஒரு டிடிஎச் கருவிக்கு மூன்று டிவி பார்ப்பது போல் உபகரணங்கள் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நாடு முழுவதும் பல கோடி பேர்கள் படம் பார்த்து விடுவார்களே?
3. இப்படி நடந்தால் திரையரங்கங்கள் பக்கம் யார் வருவார்கள் என்ற பயம் அனைவருக்கும் வந்து விட்டது. திரையுலகின் முன்னோடியாகச் செயல்படும் கமலஹாசன் இத்திரைத்துறையை நேசிப்பவர். ஆனால் இவர் ஒரு காட்சி மட்டும் தான் என்று உறுதி அளிக்கிறார். ஆனால் இவருக்குப் பின் வரும் மற்ற பெரிய படங்கள் அனைத்திற்கும் நிறைய காட்சிகளை கொடுத்து விட்டால் என்ன செய்வது?
4. இப்படி டிடிஎச் கம்பெனிகார்கள் சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கப் போவதில்லை.
5. திரையரங்கங்கள் இந்த பாதிப்பினால் ஒவ்வொன்றாக மூடி விட்டால் பிறகு சிறு முதலீட்டுப் படங்களே இல்லாமல் போய் விடுமே?
6. இப்படி பல பயங்கள் எங்கள் எல்லோர் மனதிலும் ஏற்பட்டதால் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்ட ஒரு மித்த முடிவு என்ன வெனில் கமல்ஹாசனை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இம்முறை உலகத்திலேயே எங்குமில்லை என்பது உண்மை. கமல்ஹாசன் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த முறையை கைவிட்டு விடுவார் என்று நம்புகிறோம்.
7. திரையரங்கங்களை பொருத்த வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தான் எந்த ஒரு முடிவும் எடுப்போம்.
திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் நமது முதலமைச்சர் ஜெயலலிதா இதில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் காண வேண்டும், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.


