எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.5 - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரச்சினையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வரும் பல பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 28.10.2012 அன்று, தலைவராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் இந்த வாக்கெடுப்பை நடத்தி முடித்தார். பல தடைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2.2.2013 அன்று அதே நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்ற பிறகும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் பதவி விலக மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் மேல்முறையீடு கடந்த 7.2.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 4.2.2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் அங்கு வந்து கேவலமான வார்த்தைகளால் எங்களை திட்டியதுடன், கலகம் விளைவிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 5.2.2013 அன்றும் தங்களை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.
இதற்கிடையே அதே நாளில் (5.2.2013) மத்திய சென்னை மாவட்ட பதிவாளரை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்தது தொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளையும், அவர்களுக்கு எதிராக இதுவரை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினோம். நாங்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பதிவாளர் 28.2.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். வங்கி கணக்குகளையும் முடக்கினார்.
இந்நிலையில் பதிவாளர் எடுத்த நடவடிக்கை பற்றி, பிலிம் சேம்பர் வளாகத்தில் 2.3.2013-ந் தேதி அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, நான் `நியாயமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி' சொல்லிக் கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், எங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்தில் கலாட்டா செய்து தாக்குதலில் ஈடுபட்ட, பாபுகணேஷ், ராஜசிம்மன், பாஸ்கர், பாலாஜி, ஜெமினா ராகவா, ரிஷிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அன்று இரவே ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் கும்பல் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். மாவட்ட பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும், உரிமையும் இல்லை என்று தெரிந்தும், சங்கப் பணத்தை எடுத்து நிலம் வாங்கித்தர சங்கத்தின் சட்டவிதிகளில் இடமே இல்லை என்பது நன்றாக தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொதுக்குழுவை ஏற்பாடு செய்து, தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி, கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவரது அணியினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.
எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியே இல்லாதவர்கள் பிரச்சினை செய்யும் நோக்கத்துடன் வருகிற 24-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து, கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு புகாரில் கே.ஆர். கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த