எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.5 - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரச்சினையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வரும் பல பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 28.10.2012 அன்று, தலைவராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் இந்த வாக்கெடுப்பை நடத்தி முடித்தார். பல தடைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2.2.2013 அன்று அதே நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்ற பிறகும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் பதவி விலக மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் மேல்முறையீடு கடந்த 7.2.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 4.2.2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் அங்கு வந்து கேவலமான வார்த்தைகளால் எங்களை திட்டியதுடன், கலகம் விளைவிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 5.2.2013 அன்றும் தங்களை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.
இதற்கிடையே அதே நாளில் (5.2.2013) மத்திய சென்னை மாவட்ட பதிவாளரை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்தது தொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளையும், அவர்களுக்கு எதிராக இதுவரை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினோம். நாங்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பதிவாளர் 28.2.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். வங்கி கணக்குகளையும் முடக்கினார்.
இந்நிலையில் பதிவாளர் எடுத்த நடவடிக்கை பற்றி, பிலிம் சேம்பர் வளாகத்தில் 2.3.2013-ந் தேதி அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, நான் `நியாயமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி' சொல்லிக் கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், எங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்தில் கலாட்டா செய்து தாக்குதலில் ஈடுபட்ட, பாபுகணேஷ், ராஜசிம்மன், பாஸ்கர், பாலாஜி, ஜெமினா ராகவா, ரிஷிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அன்று இரவே ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் கும்பல் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். மாவட்ட பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும், உரிமையும் இல்லை என்று தெரிந்தும், சங்கப் பணத்தை எடுத்து நிலம் வாங்கித்தர சங்கத்தின் சட்டவிதிகளில் இடமே இல்லை என்பது நன்றாக தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொதுக்குழுவை ஏற்பாடு செய்து, தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி, கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவரது அணியினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.
எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியே இல்லாதவர்கள் பிரச்சினை செய்யும் நோக்கத்துடன் வருகிற 24-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து, கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு புகாரில் கே.ஆர். கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


