எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.27 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடியை 8 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுரேஷ் கல்மாடியை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லும் போது அவர் மீது அங்கு கூடியிருந்த கும்பலில் ஒருவர் கல்வீசி தாக்கினார்.
டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் நாடுகளுக்கிடையான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்ததில் ரூ. நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. லண்டனிலிருந்து டெல்லிக்கு ஜோதி கொண்டுவந்தது டெல்லி நகரை அலங்காரம் செய்தது, விளையாட்டு வீரர்களுக்கு கட்டிடங்கள் கட்டுவதிலும் பெரும் அளவு ஊழல் நடந்துள்ளது. அரங்கம் அமைப்பது, விளையாட்டு மைதானங்களை சமப்படுத்தியது, சாலை அமைத்தது ஆகியவைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கு காரணம் காமன்வெல்த் போட்டி அமைப்பு கமிட்டி தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி மற்றும் கமிட்டியின் உறுப்பினர்கள் சுரிஜீத் லால், (இவர் இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினராகவும் உள்ளார்) மற்றும் இணை இயக்குனர் ஜெனரல் பிரசாத்(விளையாட்டு) ஆகியோர்கள்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனையொட்டி அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் விசாரணையும் நடத்தினர். இதில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் சுரேஷ் கல்மாடி, சுரிஜித் லால், பிரசாத் ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது காமன்வெல்த் முறைகேடுகள் தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 14 நாட்கள் சி.பி.ஐ. காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்கப்பட்டது. ஆனால் 8 நாட்கள் மட்டும் சி.பி.ஐ. காவலில் வைக்க நீதிபதி தல்வந்த் சிங் அனுமதித்து உத்தரவிட்டார். சி.பி.ஐ. காவலின்போது கல்மாடி மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது மேலும் பல ஊழல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் சுரேஷ் கல்மாடி இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகி இருப்பதால் அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டதையொட்டி அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்டதும் அவரது எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியை தாங்க முடியாமல் ரகளையில் ஈடுபட்டனர். கல்மாடியின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். புனே நகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள சுரேஷ் கல்மாடியின் அறையையும் தாக்கினர். அதிலிருந்த தட்டுமுட்டு சாமான்களையும் அடித்து நொறுக்கினர். புனே நகரில் இருந்து 3 முறை லோக்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கல்மாடி. மேலும் ராஜ்யசபை உறுப்பினராக 4 முறை இருந்துள்ளார். அதாவது கடந்த 30 ஆண்டுகளாக அவர் எம்.பி.யாக இருப்பதோடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக திகழ்ந்துள்ளார். ஊழல்வாதிகள் விஷயத்தில் காங்கிரஸ் பொருமையாக இருக்காது. அதனால் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டது இயற்கையானது என்று புனே நகரின் காங்கிரஸ் கிளை முக்கிய தலைவரான மோகன் ஜோஷி எம்.எல்.சி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். முன்னதாக சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்ற போது அங்கு கூடியிருந்த ஒரு கும்பலும் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக ரகளையில் ஈடுபட்டனர். கும்பலில் இருந்த ஒருவர் கல்மாடி மீது கல்வீசி தாக்கினார். உடனே அந்த நபரை சி.பி.ஐ. அதிகாரிகள், பாதுகாவலர்கள் ஆகியோர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
2026-ம் ஆண்டு- மகளிர் பிரீமியர் லீக்: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் விவரம்
07 Nov 2025மும்பை : 2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு 5 அணிகள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


