எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், ஏப்.28 - தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர்களிடம் ஆசிரியர், வி.ஏ.ஓ., சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டிய மதுரை மோசடி மன்னன், எங்கும் ஆவணங்களை கொடுக்காமலும், தடயங்களை விட்டுச்செல்லாமல் சாமர்த்தியமாக மோசடிகளை அரங்கேற்றி தலைமறைவாகி வந்துள்ளார். இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரிலும் மோசடி செய்து தலைமறைவான மோசடி மன்னன் அவரது மனைவி, மைத்துனர் போட்டோக்கள் கிடைத்ததால் அவரின் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
கோவை தொப்பம்பட்டியைச்சேர்ந்த விவேகானந்தன் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிருந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பிருந்தாவின் சகோதரர் கெவினும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது இல்லை. அதற்குள் அப்பகுதியில் ஏமாந்தவர்களிடம் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.
ஒரு பகுதியில் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பவராக தேடுவார். அவர்களிடம் தான் மிகப்பெரிய செல்வந்தர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனக்கு தொழில்கள் இருப்பதாக கூறி, உங்களது வீடு வாடகைக்கு வேண்டும். வாடகை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனது குடும்பத்தினர் வசதியாக வாழ்பவர்கள் என கூறுவார். வீட்டின் உரிமையாளர் கேட்கும் வாடகையை காட்டிலும் கூடுதலாக 5மடங்கு தருவதாகவும் வீடு வசதியாக இருக்கவேண்டும் என அடக்கமாகவும், அமைதியாகவும் கோரிக்கை வைப்பாராம். விவேகானந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் வீட்டின் உரிமையாளர், அவர் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர், சாந்தமானவர், வசதியானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்து விடுவர்.
வீட்டில் குடியேறும் விவேகானந்தன் அருகில் வசிப்பவர்கள் தன்னை மிகப்பெரிய செல்வந்தன் என நம்ப வேண்டும் என்பதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது சொந்த செலவிலேயே சில மாறுதல்களை செய்து கொள்வார். விவேகானந்தரிடம் உள்ள பல சொகுசு கார்களில் தினமும் நேரத்திற்கு ஒரு கார்களில் சென்றுள்ளார். இதன்மூலம் அந்தந்த பகுதியில் பலரிடமும் நண்பர் போல் பழகி அவர்கள் மூலமாக பலரது நட்பையும் பெற்றுவிடுவது விவேகானந்தனின் வழக்கம். பழகியவர்களிடம் தனக்கு கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாகவும் அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய பழக்கம் உண்டு என்றும், தன்னால் அரசிடம் எளிதாக காரியம் சாதிக்க முடியும் என்றும் விவேகானந்தன் ரீல் விட்டுள்ளார். மற்றவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்கள் முழுமையாக தன்னை நம்பும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். விவேகானந்தனின் இந்த கபட நாடகத்தை அறியாமல், எப்படியாவது தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் போதும் என விவேகானந்தன் கேட்ட தொகையை கொடுத்து ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.
பணம் கொடுக்கும் போது பணத்துக்கு என்ன உத்திரவாதம் என கேட்பவர்களிடம், என்னை நம்ப வில்லையா நான் உங்களுக்கு உதவ தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தை நானா வைத்துக்கொள்ளப்போகிறேன். அரசு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் உங்களுக்கு உதவலாம் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் என்மீது சந்தேகப்படுகிறீர்களே. இது எனக்கு தேவையில்லாத வேலை என மிகுந்த கோபத்துடன் வெளியில் செல்ல முற்படுவாராம். அவரது கோபத்தை கண்டு உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என நினைத்து எழுதி வாங்காமல் கூட பணத்தை விவேகானந்தனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். விவேகானந்தனின் கோபமான பேச்சுகளுக்கும் செவி சாய்க்காதவர்களிடம் அவரது மனைவி பிருந்தா சென்று எனது கணவர் ஏராளமானோருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாதி பணத்தை இப்போது கொடுங்கள் மீதியை வேலைகிடைத்தபின்னர் கொடுத்தால் போதும் என்பாராம். அவரது ஏமாற்றுப்பேச்சை நம்பியவர்களும் விவேகானநதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மதுரை திருநகரில் குடியிருந்த காலங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்த விவேகானந்தன், தேர்தல் காலத்தில் தேர்தலை காரணம் காட்டியும் பல மோசடிகளில் ஈடுபட்டார். அங்குள்ள பலரிடம் வங்கியில் தங்க காசு, தங்க பிஸ்கட், பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் தற்போது தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் அவற்றை தற்போது எடுக்கமுடியவில்லை. தனது தொழிலுக்கு உடனடியாக பணம் தேவை என பலரிடமும் ஊட்டியில் பல கோடிக்கு எஸ்டேட் வாங்க உள்ளதாகவும் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவையென்றும் கூறி தேர்தல் முடிந்தவுடன் பணமாகவோ, தங்கமாகவோ வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிடுவதாகவும் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டு விவேகானந்தனின் குடும்பத்தினர் தலைவறைவாகிவிட்டனர். மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பணத்தை பெறும்போது அதற்காக பத்திரத்திலோ, புரோ நோட்டிலோ அல்லது வெள்ளைப் பேப்பரிலோ எழுதி கையெழுத்து போட்டுக்கொடுப்பதில்லை. பெற்ற பணத்திற்கு ஆதாரமாக எதையும் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாத வகையிலும் விவேகானந்தன் தெளிவாக மோசடி வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
பல ஊர்களில் விவேகானந்தனிடம் ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் செய்திருந்தாலும் ஏராளமானோர் புகார் செய்யவில்லை. மேலும் அவர் ஊருக்கு ஊர் ஒரு பெயரை வைத்து ஏமாற்றி வந்ததால் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சுதாரிக்க முடியவில்லை. இறுதியாக மதுரை திருநகரில் அவரது குடும்ப போட்டோ சிக்கியதால் அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் சுதாரித்ததுடன் ஏற்கனவே விவேகானந்தனிடம் ஏமாந்தவர்கள் தற்போது போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


