எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.2 - என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தாமே வாங்கி கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.அந்த கடிதத்தில் என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று ஒரு புதிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு உடனே பதில் வராத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 2ம் தேதி( இன்று) அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம் கூறியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடக்கவிருந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது, அவர் என்எல்சி பங்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விருப்பத்தை பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். முதல்வர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. அது பிரதமருக்கு எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது.
அந்த நகலும் எனக்கு வந்து சேரவில்லை. இருப்பினும், என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க விரும்பும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார். இது பற்றி மேலும் கூறிய அவர் என்எல்சி நிறுவன நிர்வாகத்திலோ அல்லது பணியாளர் கொள்கையிலோ எந்த மாற்றமும் இருக்காது என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் பங்கு விற்பனை தொடர்பாக செபி அமைப்புடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்குமாறு மூலசந்தைகள்கேட்டுக்கொள்ளப்படும்.
ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் பங்குகளை விற்கிறோம். அதாவது, செபி அமைப்பின் நடைமுறைகளுக்கு ஏற்பவே பங்குகளை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். ஆனால் செபியுடன் ஆலோசிக்க நான் வேண்டும். எனவே ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டாம். எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசு ஒரு யோசனை கூறியுள்ளது. நாங்களும் அதை நிராகரிக்கவில்லை. நிச்சயம் பரிசீலிப்போம். அது நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம். எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என்று என்எல்சி தொழிலாளர்களை நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். என்எல்சி தொழிலாளர்கள் நாளை நள்ளிரவு முதல் காலவறையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக அரசின்கோரிக்கையை பரிசீலிக்க தயார் என்று கூறியிருப்பதன் மூலம் முதல்வரின் முயற்சிக்கு மற்றொரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு: சினே ரானா
23 Sep 2025மும்பை : இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.
-
கனமழை எதிரொலி: மேற்குவங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
23 Sep 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
23 Sep 2025சென்னை, தி.மு.க.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.