எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
தினேஷ் குறித்து கோலி
தினேஷ் கார்த்திக் உடனான தனது நட்பு குறித்து இந்திய அணியின் விராட் கோலி மனம் திறந்துள்ளார். தினேஷ் கார்த்திக் மிகவும் நேர்மையானவர் எனவும், தனது கடினமான காலங்களில் ஊக்கமளித்துள்ளார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே தினேஷ் கார்த்திக்குடன் நிறைய சுவாரசியமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவர் சிறந்த மனிதர். கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்கள் குறித்தும் அவருக்கு மிகுந்த அறிவு இருக்கிறது. தினேஷ் கார்த்திக்குடன் பேசுவது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நம்பிக்கையின்றி நான் தடுமாறினேன். தினேஷ் கார்த்திக் எனக்கு அருகில் அமர்ந்து, எனது தடுமாற்றம் தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தது. தினேஷ் கார்த்திக் மிகச் சிறந்த வீரர். அவரது எதிர்கால பயணங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4842 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபிகா பல்லிகல் வருத்தம்
தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.
தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
அரையிறுதியில் ஜோகோவிச்
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கோலி ஓய்வு குறித்து வாகன்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விராட் கோலி ஓய்வு குறித்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி அதிலிருந்து விலகி, லண்டனில் சாதாரண ஒரு வாழ்க்கையை நடத்தினார் என்று நினைக்கிறேன். அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அவர் அப்படியான ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நினைப்பார்.
விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் தற்போதைய ஐ.பி.எல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி 700-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதன் அடிப்படையில் பார்த்தால் அவர் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு தகுதியோடு இருக்கிறார். ஆனால் இன்னும் இரண்டு மூன்று, ஆண்டுகள் ஆகும் பொழுது நிலைமைகள் மாறும். அப்பொழுது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவார். விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.


