எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மேலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்க கூடாது எனவும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.
மாற்று சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்று சான்றிதழ் வழங்கும்போது கட்டண பாக்கி உள்ளது என்றோ, கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாற்று சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோர்களிடமிருந்து கட்டணம் பாக்கியை வசூலிக்க கூடிய கருவி அல்ல எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளை மூன்று மாதங்களில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மாற்றுச்சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்


