எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: சுனிதா வில்லியம்சுக்கு 9 மாதங்களில் எவ்வளவு சம்பளம் அளிக்கப்பட்டது என்ற விவரம் வெளியீடப்பட்டது.
விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) குறுகிய கால பரிசோதனை மேற்கொள்ள நாசா திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் பச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் சென்றனர்.
அவர்கள் ஒரு வார காலம் ஐ.எஸ்.எஸ். நிலையத்தில் தங்கி ஆய்வு பணி மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில், பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கி தவிக்கும்படியான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற டிரம்ப் அரசின் முயற்சியால், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று கடந்த 15-ந்தேதி அதிகாலை புறப்பட்டு சென்றது.
எனினும், திட்டமிட்ட நேரத்திற்கு பதிலாக 10 மணிநேர காலதாமதத்துடன், கடந்த 16-ந்தேதி காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றடைந்தது. அந்த விண்கலத்தில் இருந்த 4 விஞ்ஞானிகளையும் வில்லியம்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனால், நீண்டகாலம் விண்வெளியில் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது. அவர்கள் 2 பேரும் பால்கன் விண்கலத்தில் அமர்ந்தனர். அவர்களுடைய பயணம் தொடங்கியுள்ளது. இந்த முறை திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாக, இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் விண்வெளியில் 287 நாட்களை கழித்துள்ளனர். நீண்டகாலம் விண்வெளியில் அவர்கள் தங்கியிருந்தது உலகளவில் கவனம் பெற்றது. இவ்வளவு நாட்கள் விண்வெளி திட்டத்தில் இருந்த 2 பேருக்கும் இழப்பீடு எதுவும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபற்றி நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானியான கேத்தரீன் கிரேஸ் கேடி கோல்மேன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, நாசா விஞ்ஞானிகளின் கூடுதல் பணிநேரத்திற்காக சிறப்பு சம்பளம் என எதுவும் கிடைக்காது. அவர்கள் பணியாளர்களாக இருந்தபோதும், பூமியில் எப்போதும் மேற்கொள்ளும் வேலைக்காக பயணம் செய்வது போன்றே அவர்களுடைய விண்வெளி பயணநேரமும் கணக்கில் கொள்ளப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உணவு மற்றும் வாழ்க்கைக்கான செலவுகள் உள்ளிட்ட நாசாவின் சம்பளத்துடன் வழக்கம்போல் கிடைக்கும் ஊதியமே அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றார்.
ஆனால், கூடுதல் இழப்பீட்டு தொகை எனும்போது, நாள் ஒன்றுக்கு ரூ.347 என்ற சொற்ப அளவிலான பணமே கிடைக்கும். அந்த வகையில், 287 நாட்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளனர். இதனால் ஏறக்குறைய ரூ.1 லட்சம் கூடுதல் இழப்பீட்டு தொகையாக கிடைக்கும்.
2 விஞ்ஞானிகளும் ஜி.எஸ்.-15 சம்பள பிரிவில் வருபவர்கள். இந்த உயர் வகை பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை (12 லட்சத்து 5 ஆயிரத்து 133 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 அமெரிக்க டாலர் வரை) இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) சம்பளம் கிடைக்க பெறும்.
கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை இருக்கும் என தெரிய வந்துள்ளது. பூமிக்கு திரும்பி வந்த பின்பு அவர்கள் மற்றவர்களை போன்று இயல்பான நிலைக்கு திரும்ப நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதுதவிர, காய்ச்சல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Mar 2026- கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- ஆழ்வார ்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை
- காங்கேயம் முருகன் விடயாற்று உற்சவம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Mar 2026


