முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு: அமைச்சர் ரகுபதி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
Raghupathi 1

Source: provided

சென்னை : நீட் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தநிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒத்த கருத்துடைய பல்வேறு மாநிலங்கள் நம்முடன் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் நம் மீது நம்பிக்கையில் உள்ளனர். தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் அல்ல.

மத்திய - மாநில அரசு இடையிலான உறவை மேம்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் இந்தக் குழு வரைவு அறிக்கையை மாநில அரசுக்கு வழங்கும். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இடம்பெறுவர். நீட் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து