எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, முடிவுக்கு வந்தது 65 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியுள்ளது இந்தியா.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. சிந்து நதிநீர் பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது. அதாவது, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. உலக வங்கியின் முழு முயற்சியால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும், 65 ஆண்டு காலமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தியா தண்ணீரையே ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம்தான் 22.7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 37.4 சதவீத பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. சிந்து நதிதான் நாட்டின் 90 சதவீத உணவு பயிர்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அதன் மூலமே 2022-ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவற்றை உற்பத்தி செய்து 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிந்து நதி உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளதால் இதன் கீழ் நிர்வகிக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை இந்தியா நிறுத்த வாய்ப்புள்ளது.
இந்த வகைகளில் பாகிஸ்தானுக்கு முக்கியமாக உள்ள சிந்து நதி மூலம் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இதனால்தான் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது விவசாய பணிகளுக்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படாது என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில் ராம்பன் அணையின் மதகுகளை தற்போது மூடி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 days ago |
-
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அனுமதி
31 May 2025சென்னை : தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
-
மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
31 May 2025மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2025சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா
-
தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு
31 May 2025மதுரை : 2 நாட்கள் பயணமாக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்
31 May 2025கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.
-
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? - முப்படை தலைமை தளபதி விளக்கம்
31 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்தார் அர்ச்சனா
31 May 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
-
பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு: செவிலியர் மீது வழக்குப்பதிவு
31 May 2025வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்
31 May 2025சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தலைமை ஹாஜி மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
31 May 2025சென்னை : தமிழக அரசின் தலைமை ஹாஜி வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
-
இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி
31 May 202526-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது.
-
ஹர்திக் பாண்ட்யாவுடன் மோதலா..? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கில்
31 May 2025முல்லான்பூர் : ஹர்திக் பாண்ட்யாவுடன் மோதல் என்ற சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்
-
மும்பை - குஜராத் இடையேயான பிளே ஆப் சுற்று போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
31 May 2025முல்லான்பூர் : மும்பை - குஜராத் இடையேயான ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டியில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
-
வெற்றிக்கு காரணம் பும்ரா: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
31 May 2025முல்லான்பூர் : ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா தான் வெற்றிக்கு காரணம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பா
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
31 May 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனையானது.
-
ஒரே போட்டியில் ரோகித் 3 சாதனைகள்
31 May 2025முல்லான்பூர் : ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
-
தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்
31 May 2025சென்னை : 40 வயதில் தனக்குத் தானே கட்டிய கல்லறையில், நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.;
-
பிளே ஆப் சுற்று போட்டியில் அதிக ரன்கள்: மும்பை-குஜராத் அணிகள் இணைந்து புதிய சாதனை
31 May 2025முல்லான்பூர் : பிளே ஆப் சுற்று போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனையை மும்பை - குஜராத் அணிகள் இணைந்து படைத்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2025
01 Jun 2025 -
வார ராசிபலன்
31 May 2025