எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக் கூடியவர்கள் நாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வேலுவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:- சட்டமன்ற உறுப்பினரான வேலு கட்சியில் பொறுப்பேற்று பணியாற்றி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஏதோ, ஊர்ந்து வந்து ஏறவில்லை. தவழ்ந்து வந்து ஏறவில்லை, படிப்படியாகதான் ஏறியிருக்கிறார். ஊர்ந்து, தவழ்ந்து என்று சொல்கின்றபொழுது ஏன் கரவொலி எழுப்பினீர்கள் என்று எனக்கும் புரிகிறது. உங்களுக்கும் புரிகிறது.
ஒன்றும் இல்லை, நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நான் நிறைவாக காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலளித்துப் பேசும்பொழுது தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும்போது, தமிழ்நாடு ஏற்கெனவே எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது, வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டு சொல்வதற்காக ஒரு உதாரணத்தை சொன்னேன். ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு கம்பீரமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.
அதற்கு, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் உதயகுமார் நான் பேசி முடித்தபோது, அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. நான் பேசியது அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. பிரபலமாக இந்த செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். நான் பேசி முடித்ததற்குப் பிறகு எழுந்து சபாநாயகரைப் பார்த்து முதல்வர் சிறப்பாக பேசினார். தெளிவாகப் பேசினார். அழகாகப் பேசினார். ஆனால், இடையில் “ஊர்ந்து வந்து” என்பதை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார்.
நான் உடனே கேட்டேன். ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். குழந்தைகள் தவழ்ந்து வருவது தவறா? என்று சொன்னேன். ஏற்கெனவே, எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் இதே எடப்பாடி பழனிச்சாமி, அவரின் புகழைப் பற்றி பேசுகின்றபோது, அவர் எப்படியெல்லாம் முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது குறித்து அவரே பேசியிருக்கிறார். நான் தவழ்ந்து, தவழ்ந்து, படிப்படியாக வந்து முதல்வராக வந்திருக்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. நான் நேற்றுதான் பார்த்தேன். முன்பே பார்த்து இருந்தால் சட்டமன்றத்தில் சொல்லியிருப்பேன்.
அப்போது கூட கேட்டேன். உதயகுமார் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, விடாமல் “தவழ்ந்து” என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள், வேண்டாம், என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் சொன்னேன். யாரையாவது குறிப்பிட்டு நான் பேசியிருப்பதாக நீங்கள் கருதினால், யார் என்று சொல்லுங்கள். நான் எடுத்துவிடுகிறேன். அதற்கு நானே சிபாரிசு செய்கிறேன் என்று சொன்னேன். உட்கார்ந்துவிட்டார். இதுதான் நடந்தது.
ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் மானியக் கோரிக்கைகளை விவாதித்து அதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றோம். அதைத் தொடர்ந்து 110-விதியைப் பயன்படுத்தி என்னென்ன பணிகளையெல்லாம் நாம் நிறைவேற்றப்போகிறோம்.
அதற்குப் பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் நன்றாகப் பார்த்திருப்பீர்கள். ஆகவே, இன்றைக்கு மற்ற மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே, உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லியிருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்பட்டு நான் உறுதியோடு சொல்கிறேன். இங்கு கூட பேசுகின்றபோது சிலர் சொன்னார்கள். கண்ணப்பன் பேசுகின்றபோது சொன்னார். 200 அல்ல 220 வரும் என்று அவர் சொன்னார். அதில் என்ன கஞ்சம் 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை.
ஏன் என்றால், செல்லும் இடங்களிலெல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்கின்றபோது நான் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பார்க்கும்போது உள்ளபடியே மெய் சிலிர்த்துப்போகிறேன். ஆகவே, நிச்சயமாக, உறுதியாக நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் நாம் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.
எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது வருமான வரித் துறையாக இருந்தாலும் சரி அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி, சி.பி.ஐ. வைத்து மிரட்டக்கூடியதாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை என்ற எந்த துறையாக இருந்தாலும் சரி இப்படி எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக்கூடியவர்கள் நாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 days ago |
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
30 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2025
30 Apr 2025 -
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்தப்பட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
30 Apr 2025புது டெல்லி, ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
தமிழகத்தல் 60,000 பேருக்கு வேலை வழங்கும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்
30 Apr 2025சென்னை, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை வெளியிட்டார்.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
30 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
-
கூட்டாட்சி மிக்க இந்தியாதான் உண்மையான தேசபக்தியாகும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
30 Apr 2025சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை
30 Apr 2025சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது.
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியா, பாக்., அமைச்சர்களுடன் விரைவில் அமெரிக்கா ஆலோசனை
30 Apr 2025வாஷிங்டன் : இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி
30 Apr 2025கைபர் பக்துன்குவா : பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவாவில் குணடு வெடிப்பி்ல் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
-
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Apr 2025சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
-
உழைப்பாளர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று மதுக்கடைகள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
30 Apr 2025சென்னை, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்து விஜய் உத்தரவு
30 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜே.பி.நட்டா மே 3-ல் தமிழகம் வருகிறார்
30 Apr 2025சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
-
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Apr 2025மதுரை : மதுரையில் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு
30 Apr 2025நெல்லை, மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்க