முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் : காஷ்மீர் முதல்வர் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      இந்தியா
Umar-Abdullah 2024-10-16

Source: provided

ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், அமர்நாத் யாத்திரையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.

52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து