எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை கொளத்தூர், பழனி உள்ளிட்ட 3 இடங்ளில் ரூ. 22.61 கோடி மதிப்பிலான புதிய முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான (முதியோர் காப்பகங்கள்) அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். கொளத்தூரில் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
6 நிகழ்ச்சிகளில்....
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முதலாவது நிகழ்ச்சியாக ராஜாஜி நகரில் முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதியில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் தங்கும் உறைவிடம், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக ரூ.8.48 கோடி செலவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக ரூ.5.25 கோடி செலவிலும் முதியோர் தங்கும் இடத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 22.61 கோடி மதிப்பீட்டில் இந்த 3 உறைவிடங்களுக்கான (முதியோர் காப்பகங்கள்) பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள்...
இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
பணி நியமன ஆணை...
இந்த விழாவில் மாற்றுத் திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவர் முதல்வரை பாராட்டி பாடல் ஒன்றை பாடினார். இதைத்தொடர்ந்து வி.கே.எம். காலனியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 350 மாணவ-மாணவிகளுக்கு தையல் எந்திரம் 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாணவர்களுக்கு பாராட்டு....
இதைத் தொடர்ந்து ரூ. 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 318 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராட்டினார். இதையடுத்து பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரன் நகர் 80 அடி சாலையில் புதுப்பிக்கப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
முதல்வருக்கு வரவேற்பு...
கொளத்தூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்று பெண்கள் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்து கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளி நாகராஜன், மண்டல தலைவர் சரிதா, நிர்வாகிகள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 May 2025சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார்: கனிமொழி எம்.பி.
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை பெற்று தந்த காவல்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை காவல்துறை பெற்று தந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கன்னடம் மொழி குறித்து பேச்சு: கமலுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
28 May 2025பெங்களூரு, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசிய கமலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
28 May 2025சென்னை, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.
-
சற்று குறைந்தது தங்கம் விலை
28 May 2025சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பு ஒரே வழி: திருவொற்றியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 May 2025சென்னை, தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்புதான் ஒரே வழி என்று திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முத
-
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்
28 May 2025மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும்: துணை முதல்வர்
28 May 2025சென்னை, கமலின் குரல் மாநிலங்களவையிலும் இனி ஒலிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
28 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
28 May 2025மீஞ்சூர், பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி
28 May 2025புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலீஜியம் பரிந்துரை
28 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த கோலி
28 May 2025லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.
-
மற்ற படங்களுக்கும் இசையமைக்கப் போகிறேன் - விஜய் ஆண்டனி
28 May 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
-
கரும்பு நிலுவைத் தொகை வழங்க உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
28 May 2025சென்னை, சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கிய முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
-
அண்ணா பல்கலை., வழக்கின் தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன பாதுகாப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
28 May 2025வாஷிங்டன், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ம.நீ.ம. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்
28 May 2025சென்னை, வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி: சென்னை மகளிர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு
28 May 2025சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்
-
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’
28 May 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
28 May 2025இம்பால், மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்
28 May 2025டெக்சாஸ், ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்.
-
காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
28 May 2025காசா : உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
-
தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து
28 May 2025ஸ்ரீநகர், பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெ