முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்கள் கடமை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      தமிழகம்      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக, தமிழகம் முழுவதும் பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கினார் ஸ்டாலின். இன்றுவரை அந்த பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன, அந்த கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா என்று எழுப்பிய கேள்விகளுக்கு புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்குக்கூட – ‘முதல்வரின் முகவரித்துறை’, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘மக்களுடன் முதல்வர்’, ‘நீங்கள் நலமா?’, ‘மக்களுடன் முதல்வர் – நகரம் மற்றும் ஊரகம்’ ‘மக்களுடன் முதல்வர் – பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்’ என்று பல்வேறு பெயர்களை சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. ஆனால், மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு ஆட்சியின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து