எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2014-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014-இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினார். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.
இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள திரு. ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது. மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினைத் திரு. ஸ்ரீராமன் நிறைவு செய்தார்.
அதன் பிறகு, கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.
இதில் கீழடியில் நிலவிய கலாசாரம். அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள். நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5.765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இயக்குநர் திரு. நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார். அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.
இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும்.
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால், வினைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஐ. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால். அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால். இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க. போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம், தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.க.வின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன். வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு. குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.க.விற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையையும் போர்த்தி அழுக்காக்கிவிட இயலாது.
அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ துணைபோகும் சக்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்பதை எங்கள் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
சேலத்தில் அன்புமணி தலைமையில் இன்று கட்சி கூட்டம்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி : எம்.எல்.ஏ. அருளும் சிகிச்சைக்காக அனுமதி
18 Jun 2025சென்னை : அன்புமணி தலைமையில் சேலத்தில் இன்று கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-06-2025.
18 Jun 2025 -
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Jun 2025சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது
-
சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைப்பு : ஐ.சி.சி. தலைவா் ஜெய்ஷா ஆதரவு
18 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளை நடத்த செலவு அதிகமாவதாக டெஸ்டை நடத்தும் சிறிய நாடுகள் தயக்கம் காட்டும் நிலையில், சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி
-
‘சமரசத்துக்கு வாய்ப்பில்லை - போர் தொடங்கியது’ : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் கமேனி எச்சரிக்கை
18 Jun 2025தெஹ்ரான் : ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது.
-
அதர்வா நடிக்கும் டி என் ஏ.
18 Jun 2025ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் டி என் ஏ' ( DNA) இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு வி
-
நன்றி அறிவிப்பு சொன்ன மெட்ராஸ் மேட்னி படக்குழு
18 Jun 2025குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வரிசையில் மிகச்சாதாரணமான மனிதர்களையும் குடும்ப அமைப்பின் வலிமையையும் வெளிக்காட்டுகிற இன்னொரு வெற்றிப்படமாக மாறியிருக்கிறது ‘மெட்ராஸ் மே
-
கிருஷ்ணகிரியில் 'மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jun 2025சென்னை, 'மா' சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளி
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறும்: திருமாவளவன்
18 Jun 2025சென்னை : தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர்
18 Jun 2025விதா ஸ்டுடியோ P.R விஜய் தயாரிக்கும் படம் பிட்பாக்கெட் இப்படத்தில் P. R.
-
உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்: 'டாப் 10'-ல் ஆஸ்திரேலியாயை சேர்ந்த 3 நகரங்கள்
18 Jun 2025புதுடில்லி : 2025ம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பிடித்துள்ளது.
-
ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: மேலும் தள்ளிப்போன சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்
18 Jun 2025புதுடெல்லி : ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பால் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மேலும் தள்ளிப்போகியுள்ளது.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை
18 Jun 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையானது.
-
கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி
18 Jun 2025ஒட்டாவா : கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார்.
-
நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜூலை 14-ல் ஏவ திட்டம்
18 Jun 2025பெங்களூர் : நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
18 Jun 2025புதுடில்லி : தென்மேற்கு வங்கதேசம், அதை ஒட்டிய மேற்கு வங்கத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் க
-
சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து
18 Jun 2025சென்னை : சிங்கப்பூர் செல்ல இருந்த 2 ஏர் இந்தியா விமானங்கள் சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த புதுக்கோட்டை மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று அமைச்சர் உறுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள
-
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 585 பேர் பலி
18 Jun 2025தெஹ்ரான், இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித
-
இந்தியா, கனடா உறவுகள் முக்கியமானவை: பிரதமர்
18 Jun 2025ஒட்டாவா : இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
18 Jun 2025தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
கீழடி விவகாரம்: மு.க.ஸ்டாலினின் முகக்கவசம் அணிந்து மதுரையில் தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
18 Jun 2025கீழே படத்துடன்....
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நான்கு துறைகளின் ஆய்வுக்கூட்டம் : துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
18 Jun 2025சென்னை, அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கிரிக்கெட்டைதான் அதிகம் நேசிக்கிறேன்: டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்காதது ஏன்? - பும்ரா விளக்கம்
18 Jun 2025மும்பை : இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்