எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அதே நேரத்தில் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மனும் அனுப்பி இருந்தார்கள். இதனை ஏற்று நடிகர் கிருஷ்ணா நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின்போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா நான் கொகைன் உள்ளிட்ட எந்த போதைப்பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என்றும் அவைகளை பயன்படுத்தும் அளவுக்கு எனது உடல்நிலை கிடையாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும் கிருஷ்ணா போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளாரா என்பதை கண்டறிவதற்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.
இதில் கிருஷ்ணா போதைப்பொருட்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கிருஷ்ணாவிடம் 20 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை நேற்று காலையிலும் நீடித்தது. நேற்று காலை 9 மணியளவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் கிருஷ்ணாவிடம் மீண்டும் விசாரணையை தொடங்கினார். போலீஸ் நிலையத்தில் வைத்து நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்பது போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு அவரது வீட்டில் அனைத்து அறைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். வீட்டில் இருந்த பீரோக்கள் அலமாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் கிருஷ்ணா பயன்படுத்திய காரிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கிருஷ்ணாவின் வீட்டிலிருந்தோ காரில் இருந்தோ போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் கிருஷ்ணாவிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. பிரமுகரான பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் யார்-யார் தொடர்பில் இருந்தார்கள்? பண பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள்?என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது நடிகர் கிருஷ்ணாவும் பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். அ.தி.மு.க. நிர்வாகி பிரசாத்துடன் எந்த மாதிரி தொடர்பில் இருந்தீர்கள்? உங்கள் இருவருக்கும் இடையே எந்த அடிப்படையில் பண பரிமாற்றம் நடைபெற்றது என்பது போன்ற கேள்விகளும் கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளித்த கிருஷ்ணா சினிமா தொடர்பாக இருவருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அ.தி.மு.க. பிரமுகரான பிரசாத்துடன் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணா வெப் சீரியல் ஒன்றை வெளியிடுவது தொடர்பாக பிரசாத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பதாக தெரிகிறது. இதற்காகவே அவர் பிரசாத்துக்கு பணம் அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது உண்மையான தகவல் தானா? இல்லை போதைப்பொருளுக்காக அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் தான் ஸ்ரீகாந்த் போன்று நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும். கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடமும் போதைப்பொருள் வழக்கில் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருவது தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் மருந்துகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சோதனையின் முடிவிலும் போதைப்பொருள் வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. எனக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அது மட்டுமின்றி இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதனால் அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறேன். தான் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக வெளியாகும் தகவலில் எந்த உண்மையுமில்லை. அதுபோன்ற போதைப்பொருளை பயன்படுத்தினால் நான் உயிருடனே இருக்க முடியாது என்றும் நடிகர் கிருஷ்ணா போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ்களையும் அவர் போலீசாரிடம் கொடுத்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் அளித்திருப்பதாகவும் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


