எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 26-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 27-ம் தேதி இங்கிலாந்தையும், 29-ம் தேதி வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் தலைமையிலான அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நடத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி : யுவராஜ் சிங் (கேப்டன்), ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத் மான், வினய் குமார், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன் மற்றும் பவான் நெகி.
___________________________________________________________________________________________________________________
பியூ வெப்ஸ்டர் அசத்தல்
பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5-ஆவது போட்டியில் ஆஸி. அணிக்காக அறிமுகமானார் பியூ வெப்ஸ்டர். 31 வயதாகும் இவர் முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஆஸி. அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த இவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆஸி. அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டிலும் அரைசதம் அடித்த வெப்ஸ்டர், இரண்டாவது டெஸ்ட்டில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். 6 போட்டிகளில், குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் 9 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களை அடித்து அசத்தியுள்ளார். பியூ வெப்ஸ்டர் 57, 39, 23, 31, 72, 9, 11, 63, 60 என சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 45.63ஆக இருக்கிறது. பந்துவீச்சில் வெப்ஸ்டர் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக மிளிரும் வெப்ஸ்டருக்கு ஆஸி. ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
___________________________________________________________________________________________________________________
டெஸ்ட் தொடருக்கு சிக்கல்?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, வங்காளதேச கிரிக்கெட் வாரியமோ இதுதொடர்பான அறிவிப்பை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
___________________________________________________________________________________________________________________
ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) விளாசினார். இந்திய அணி வீரர்கள் இணைந்து மொத்தமாகத்தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வர வேண்டும் என்பது பி.சி.சி.ஐ.-யின் விதிமுறையில் உள்ளது. ஆனால், ஜடேஜா மட்டும் முன்னதாக மைதானத்திற்கு வர அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் பந்து புதியதாக இருந்ததால், நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டால் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்து பயிற்சி மேற்கொண்டதுதான்.
இதுகுறித்து ஜடேஜா கூறியதாவது:- முன்னதாக மைதானத்திற்கு சென்று கூடுதலாக பேட்டிங் செய்தேன். ஏனென்றால், நான் 2ஆவது நாளில் கூடுதலாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால். ஏனென்றால், பந்து புதிதாக இருந்தது. நியூ பால்-ஐ பார்க்க முடியும் என்றால், இன்னிங்சில் தொடர்ந்து விளையாட அது எளிதாக இருக்கும். இங்கிலாந்தை பொறுத்தவரை நாம் அதிக ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. பந்து எந்த நேரத்தில் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆகும். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
___________________________________________________________________________________________________________________
ஆஸி. 286 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 110 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி 112 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
___________________________________________________________________________________________________________________
சுப்மன் கில்லுக்கு பாராட்டு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த தொடருக்கு முன்னதாக சுப்மன் கில்லை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்போது பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "தொடரின் தொடக்கத்தில், அவரது (சுப்மன் கில்) சராசரி 35, அது அவரது தரத்திற்கு போதுமானதாக இல்லை என்று நான் சொன்னேன். இந்தத் தொடரின் முடிவில் அவர் சராசரியாக 45 ரன்களை எடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் அதனை செய்யாமல் விட மாட்டார். கேப்டனாக சிறப்பாகத் துவங்கியுள்ள அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளது அற்புதமானது. 2-வது போட்டியில் சுப்மன் கில் டாஸ் தோற்றது சிறந்தது. கவாஸ்கர் சொன்னது போல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்விங், வேகம் அதிகமாக இல்லாத நல்ல ஆடுகளத்தில் அசத்துவார்கள். அவருடைய கால்கள் நன்றாக நகர்கிறது. அவருடைய டெக்னிக் சிறப்பானதாக இருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை அவர் கொண்டுள்ளார்" என்று கூறினார்.
___________________________________________________________________________________________________________________
3-வது சுற்றுக்கு சினெர் தகுதி
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் வுகிக் (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் 6-1, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Mar 2026- கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- ஆழ்வார ்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை
- காங்கேயம் முருகன் விடயாற்று உற்சவம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Mar 2026


