முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, திருவாரூரில் நேற்று விவசாயிகளை சந்தித்தார்.

அப்போது அவர் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது: மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், வரும் வழியில் உள்ள நகரப்பகுதி கழிவுநீர் கலந்து மாசுபடுவதால் பயிர்களுக்கும், கடைகோடி விவசாயிக்கும்  பாதிப்பு ஏற்படுகிறது.  கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கின்ற திட்டம் வகுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலோடு ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதனால், அந்த விவசாயிகளின் கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம். இந்தியா கூட்டணியில் உள்ள இன்றைய ஆட்சியாளர்கள், பிரதான பிரச்சினையாக உள்ள காவிரி பிரச்சினையை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.  

கோதாவரி - காவிரி இணைப்பு நிறைவேற்றப்பட்டால் 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலத்தில் உள்ள நதிநீர் பிரச்சினை தீர்ந்து விடும். குடிநீருக்கு தேவை என தண்ணீரை எடுத்து வந்தால், மத்திய அரசின் அனுமதியில்லாமல் நிறைவேற்றலாம் என்றும் தெலங்கானா, ஆந்திர முதலமைச்சர்களால் ஆலோசனை தரப்பட்டது. அத்தகைய திட்டத்தையும் தொடராமல் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது.

சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய கால்நடைப்பூங்கா ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 20 ஏக்கரில் அமைக்கப்பட்டு ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டது. கால்நடை மருத்துவக்கல்லூரி முடியும் தருவாயில் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு பயன்படும் இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பூட்டி வைத்து விட்டனர் என்றார்.

தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகளையும் சந்தித்து கோரிக்கைகளை பழனிசாமி கேட்டறிந்தார். இந்த சந்திப்பு நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து