எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பரபரப்பான தீர்ப்பு....
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி நீண்டகாலம் கிடப்பில் போட்டு இருந்தார். இதனால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
தனியுரிமை இல்லை...
அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்துக்குள்ளும், கவர்னர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது. மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், கவர்னருக்கு தனியுரிமை கிடையாது என்றும், மந்திரி சபையின் ஆலோசனையின்பேரில் கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் கூறியது.
இதுவே முதல்முறை...
கவர்னர் அனுப்பிவைத்த மசோதா மீது ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசுகள் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயித்தது இதுவே முதல்முறை ஆகும்.
14 கேள்விகள் விவரம்...
இதற்கிடையே இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி, சுப்ரீம் கோர்ட்க்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள் விவரம் வருமாறு.,
1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.
2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.
3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட் ஆய்வுக்கு உட்பட்டதா?.
4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட் விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.
5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட் உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட் ஆய்வுக்கு உட்பட்டதா?.
7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.
9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட் ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட் விசாரிக்க அனுமதி உள்ளதா?.
10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.
11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.
12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.
13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.
14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.
முதல்வர் கண்டனம்...
தமிழ்நாடு கவர்னர் தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஜனாதிபதி மூலமாக சுப்ரீ்ம் கோர்ட்டில் விளக்கம் கேட்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதற்கிடையே 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அரசியல் சாசன அமர்வு...
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 22-ம் தேதி விசாரணை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாதிபதி திரெளபதி முர்முவின் 14 கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து, சுப்ரீ்ம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு ஆணையிட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்
22 Jul 2025மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம்.
-
மணமகளுக்கு தங்கத்துடன் இலவச பட்டுச்சேலை: இ.பி.எஸ்., வாக்குறுதி
22 Jul 2025கும்பகோணம் : ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
22 Jul 2025சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி
-
கெவி திரை விமர்சனம்
22 Jul 2025அடிப்படை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் நாயகன் ஆதவன் தனது கர்ப்பினி மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை உருவாகிறது.
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்
22 Jul 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
-
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
வெற்றி நடிக்கும் சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்
22 Jul 2025சின்னத்தம்பி புரொடக்சன் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் வெற்றி நடிப்பில் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்.
-
ஆகஸ்ட் 1-ல் வெளியாகும் அக்யூஸ்ட்
22 Jul 2025உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்யூஸ்ட்.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
22 Jul 2025மும்பை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
-
குரூப்-4 தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
22 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வர்கள் விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
-
வரும் 26-ம் தேதி வரை 4 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்
22 Jul 2025சென்னை : வரும் 26-ம் தேதி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கதேச விமானம் விபத்து: உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
22 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர்.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
22 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனையானது.
-
குரூப் 4 மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Jul 2025சென்னை : குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
22 Jul 2025தூத்துக்குடி, வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஆலோசனை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் என முதல்வர்
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் Mr.பாரத்
22 Jul 2025பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க, Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பாரத் & நிரஞ்சனின் “Mr.பாரத்” படத்தின் படப்பிடிப
-
ரெட் ப்ளவர் படத்தின் இசை வெளியீட்டு விழா
22 Jul 2025ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ப்ளவர்”.
-
முறியடிக்கப்படாத சாதனை
22 Jul 2025இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார்.
-
குரூப்-4 தேர்வு விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி: டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
22 Jul 2025சென்னை, குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆக.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம்
22 Jul 2025சென்னை : மெட்ரோ ரயிலில் பயணிக்க 1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மத்திய, அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
22 Jul 2025புதுடெல்லி, மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரச
-
வரும் 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு: சபரிமலையில் தரிசனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியது
22 Jul 2025தேனி : சபரிமலையில் வருகிற 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு தரிசனத்திற்கு முன்பதிவுகள் தொங்கின.