எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மான்செஸ்டர் : மான்செஸ்டரில் இன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பின்தங்கியது...
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட் சில் நடந்த 3-வது போட்டியில் 22 ரன்னிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமன் செய்யுமா?...
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் இன்று (23-ந்தேதி) தொடங்குகிறது. லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றது ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான சவால்...
இந்த டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஓல்ட் டிராபோர்டில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இதனால் கடுமையான சவால் காத்திருக்கிறது. வீரர்களின் காயத்தால் இந்திய அணி தத்தளிக்கிறது. முழங்கால் காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி எஞ்சிய 2 போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதுவரை வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங்கும் நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆகாஷ் தீப்பும் ஆடுவது சந்தேகமே. இதனால் 24 வயதான அன்ஜுல் கம்போஜ் அணியோடு இணைந்துள்ளார். அவர் டெஸ்டில் அறிமுகமாகும் நிலை உள்ளது.
ரிஷப் பண்ட் தகுதி...
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் வாய்ப்பில் இருக்கிறார்கள். தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் முதல் டெஸ்டில் மொத்தம் 34 ரன்களே எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பதால் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.
தொடரை கைப்பற்ற...
மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மிகப்பெரிய ஸ்கோரை குவித்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் கொடுக்க முடியும். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது. 11 பேர் கொண்ட அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு பதிலாக லியம் டாசன் இடம்பெற்று உள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடுகிறார். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும்.
140-வது டெஸ்ட்...
இரு அணிகளும் இன்று மோதுவது 140-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது. மான்செஸ்டரில் 9 டெஸ்டில் ஆடி இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. 4-ல் தோற்றது. 5 டெஸ்ட் டிரா ஆனது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மணமகளுக்கு தங்கத்துடன் இலவச பட்டுச்சேலை: இ.பி.எஸ்., வாக்குறுதி
22 Jul 2025கும்பகோணம் : ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
22 Jul 2025சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்
22 Jul 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
-
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
22 Jul 2025மும்பை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
-
குரூப்-4 தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
22 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வர்கள் விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
-
வரும் 26-ம் தேதி வரை 4 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்
22 Jul 2025சென்னை : வரும் 26-ம் தேதி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கதேச விமானம் விபத்து: உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
22 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர்.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
22 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனையானது.
-
குரூப் 4 மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Jul 2025சென்னை : குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
22 Jul 2025தூத்துக்குடி, வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஆலோசனை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் என முதல்வர்
-
முறியடிக்கப்படாத சாதனை
22 Jul 2025இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார்.
-
குரூப்-4 தேர்வு விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி: டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
22 Jul 2025சென்னை, குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆக.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம்
22 Jul 2025சென்னை : மெட்ரோ ரயிலில் பயணிக்க 1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மத்திய, அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
22 Jul 2025புதுடெல்லி, மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரச
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு
22 Jul 2025மான்செஸ்டர் : மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
-
ஜப்பான்: பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி
22 Jul 2025டோக்கியோ : ஐப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளது.
-
வரும் 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு: சபரிமலையில் தரிசனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியது
22 Jul 2025தேனி : சபரிமலையில் வருகிற 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு தரிசனத்திற்கு முன்பதிவுகள் தொங்கின.
-
பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்பட 10 பிராந்திய மொழிகளில் வெளியீடு
22 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்ளிடட் 10 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் ட்ரம்ப் : அமெரிக்க ஊடக செயலாளர் பெருமிதம்
22 Jul 2025வாஷிங்டன் : இந்தியா- பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் ட்ரம்ப் எனறு அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறினார்.
-
தற்போது நலமுடன் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
-
4-வது டெஸ்ட்: இங்கிலாந்தின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம்
22 Jul 2025மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.