எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஹுசைன் டாலட் 31 ரன்களும், அப்துல்லா சஃபீக் 26 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெடியா பிளேட்ஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 33.2 ஓவர்களில் எட்டிப் பிடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
_______________________________________________________________________________________________
சல்மான்கானின் புதிய திட்டம்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சல்மான் கான் கூறியதாவது:- ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.
_______________________________________________________________________________________________
இளம் வீரருக்கு பி.சி.சி.ஐ. கெடு
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம்பெற உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவையும் உடற்தகுதியை நிரூபிக்க பி.சி.சி.ஐ. கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்சிஏ- க்கு ஒரு குறுகிய பயணம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
_______________________________________________________________________________________________
ரிக்கி அணியில் 2 இந்தியர்கள்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்தவர்களில் நவீன கிரிக்கெட்டில் அசத்திய விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் இடம்பெறவில்லை. அத்துடன் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட அவர் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
ஆனால் அந்த பட்டியலில் 2 இந்திய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த 5 ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் :- 1. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), 2. சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), 3. ராகுல் டிராவிட் (இந்தியா), 4. ஜோ ரூட் (இங்கிலாந்து), 5. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இது தொடர்பாக பாண்டிங் பேசுகையில், “நான் எதிர்கொண்டு விளையாடியதிலேயே பிரையன் லாரா மிகவும் திறன் மிகுந்த பேட்ஸ்மேன். நான் பார்த்ததிலேயே டெக்னிக்கல் அளவில் சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர். அதே போல ராகுல் டிராவிட். அவர்களுடன் தற்போது நான் ஜோ ரூட்டையும், வில்லியம்சனையும் சேர்ப்பேன்” என்று கூறினார்.
_______________________________________________________________________________________________
பும்ரா மீது கடும் விமர்சனம்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வீரர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை என்பது முட்டாள்தனமானது இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவரும், வீரருமான சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ முக்கியமான போட்டிகளை முன்னணி வீரர்கள் தவற விடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எப்படி ஏற்றுக்கொள்கிறது என தெரியவில்லை. இந்திய அணியில் கேப்டன், தலைமை பயிற்சியாளரை விட உடல்தகுதி நிபுணர்தான் முக்கியமானவரா? அப்படி என்றால் தேர்வாளர்களின் பணி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
_______________________________________________________________________________________________
கோலி குறித்து வெங்சர்க்கார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு பெறுங்கள் என்று வற்புறுத்தியிருப்பேன் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரில் விளையாடிய பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விராட்டை வற்புறுத்தியிருப்பேன். ஏனெனில் இந்த தொடரில் அவரது தரமும் அனுபவமும் நமக்கு தேவைப்பட்டது ”என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
08 Dec 2025புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
08 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாள
-
தமிழகத்தில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு
08 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2025
08 Dec 2025 -
பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்
08 Dec 2025மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
08 Dec 2025கரூர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி
08 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
தி.மு.க. ஊழல்: கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு
08 Dec 2025சென்னை, தி.மு.க. ஊழல் கூறித்து கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
புதுச்சேரி த.வெ.க. பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை - என்.ஆனந்த்
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த த.வெ.க. தொண்டர்களுக்கு அனுமதியில்லை என்று பொதுசெயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
-
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
-
புதுச்சேரி இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க.தலைவர் விஜய் பேசுகிறார்: 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.
-
முதல்வர் சார்தான் உதவி பன்னணும்: கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
08 Dec 2025சென்னை, உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
-
வனவிலங்கு இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைத்த அரசு
08 Dec 2025சென்னை, யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்து விரோத அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: வானதி சீனிவாசன்
08 Dec 2025சென்னை, தி.மு.க.வின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
-
த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி: டிடிவி தினகரன் பரபரப்பு
08 Dec 2025திருப்பூர், த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
08 Dec 2025சென்னை, 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி
08 Dec 2025திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ குளறுபடிகள் குறித்து பார்லி. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
08 Dec 2025புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாய
-
நடிகை பாலியல் வழக்கு: பிரபல மலையாள பட நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட் உத்தரவு
08 Dec 2025எர்ணாகுளம், நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவாதம்: பா.ஜ.க. பார்லி., கூட்டம் இன்று கூடுகிறது
08 Dec 2025டெல்லி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (டிச. 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Dec 2025சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் விருதுகளை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்
08 Dec 2025சென்னை, மத்திய அரசின் தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்ற 5 மாவட்டங்களின் கலெக்டர்கள் தமிழக முதல்வர்
-
இன்று தொடங்கும் டி-20 தொடருக்கு ஹார்திக், சுப்மன் கில் தயார்: கேப்டன் சூர்யகுமார் யாதவ்
08 Dec 2025மும்பை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவ
-
சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்
08 Dec 2025கோவை, சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
100 சதங்கள் அடிப்பார்: கோலி மீது கவாஸ்கர் நம்பிக்கை
08 Dec 2025மும்பை, கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.


