எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டுள்ளது என்று வெளிநாடு பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு...
தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.
ஆக. 30-ல் தொடக்கம்...
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் என்.ஆர்.டபுள்யூ எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ப் விமான நிலையத்தில் தரையிறங்கினேன்.
கொலோன் பல்கலை.,
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். அதன்பிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-ல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது.
ஓலைச்சுவடிகளை....
அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள டாக்டர் சுவன் வொர்ட்மேன் , ஸேரோன் நாதன, டாரியா லாம்பர்க்ட் ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.
நிறுவனங்களுடன்...
செப்டம்பர் 1 கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
முதலீட்டாளர் மாநாடு...
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்வரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
ரூ. 7,020 கோடி முதலீடு...
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செப்டம்பர் 2 அன்று காலையில் என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
லண்டன் நகருக்கு...
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
பெரியாரின் படத்தை...
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
06 Sep 2025சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
06 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
06 Sep 2025சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை கடந்து வந்த பாதை
06 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Sep 2025லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் : மத்திய அமைச்சர் அஸ்வினி கருத்து
06 Sep 2025புதுடெல்லி : நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜி.எஸ்.டி.
-
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
06 Sep 2025கொச்சி : ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி - ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்
06 Sep 2025வாஷிங்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல்
-
மொரீசியஸ் பிரதமர் 9-ம் தேதி இந்தியா வருகை
06 Sep 2025புதுடெல்லி : மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் வருகிற 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகள்: டி.ஜி.பி. வழங்கினார்
06 Sep 2025சென்னை : 46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகளை தமிழக டி.ஜி.பி. வழங்கினார்
-
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை: அமெரிக்கா
06 Sep 2025வாஷிங்டன் : இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.