எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.109 கோடியில் அறநிலையத்துறை சார்பில் 19 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், கோவில்களுக்கு குடமுழுக்குகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், ஒருகால பூசைத் திட்டம் விரிவாக்கம், ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
11 கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோவிலில் 59.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்னி தீர்த்தம் படித்துறை, வாகன நிறுத்துமிடம், பிர்லா காட்டேஜ் பகுதி, கோவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அடிப்படை வசதி மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல்; 16.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் புதியதாக 54 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல்; திருவாரூர், தியாகராஜசுவாமி கோவிலில் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கமலாலய திருக்குளம் திருப்பணி, தேவாசிரிய மண்டபம் மற்றும் முன்மண்டபம் பழுது பார்த்து புதுப்பித்தல் பணிகளை தொடக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமாளிகைபத்தி மண்டபம் கட்டுதல்; புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம், பசுபதீஸ்வரர் கோவிலில் 3.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன்னதி மகாமண்டபம் மதில்சுவர் திரும்ப கட்டுதல்; சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில் 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுதல் பணிளை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், குச்சனூர், சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டுதல்; புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளவிடுதி, அகஸ்தீஸ்வரர் கோவிலில் 2.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன்னதி மகாமண்டபம் மதில்சுவர் திரும்ப கட்டுதல்; ஈரோடு மாவட்டம், பெருந்துறை, செல்லாண்டியம்மன் கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்டுதல்; பெருந்துறை, வாகைத்தொழுவம்மன் கோவிலில் 1.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கட்டுதல்; திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் 1.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்டுதல்; கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம், நவகோடி நாராயணப்பெருமாள் கோவிலில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் என மொத்தம் 108.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள் திறந்து வைத்தல் மற்றும் சிற்றுந்துகளை தொடங்கி வைத்தல், கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் கோவிலில் 6.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர், முடி காணிக்கை மண்டபம் மற்றும் உடைமாற்றும் அறை; தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், நாகநாத சுவாமி கோவிலில் 3.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி; கோவை மாவட்டம், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் 1.45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி; நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அன்னதானக் கூடங்களை திறந்து வைத்தார்.
1.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூர், பைரவநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர், பரிமள ரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் அலுவலகம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் திட்டக்குடி, அரியலூர் மாவட்டம் - கீழப்பழுவூர், இராணிப்பேட்டை மாவட்டம் - நெமிலி, மயிலாடுதுறை மாவட்டம் - புத்தூர் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள்; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1.23 கோடி ரூபாய் செலவிலான 3 சிற்றுந்துகள் என மொத்தம் 15.30 கோடி ரூபாய் செலவிலான 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


