எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் டிச.16 - அதிமுக அரசின் நல்ல திட்டங்களுக்காக கிடைத்த வெற்றிதான் ஏற்காடு இடைத் தேர்தல் வெற்றி என நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் இரவு வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். வாழப்பாடி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான சதீஷ்குமார் வரவேற்று பேசினார். ஏற்காடு எம்.எல்.ஏ.பி.சரோஜா, சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன்,ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மணி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தலிங்கம், ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன்,செம்மலை எம்.பி. மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்டு, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது. ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மகத்தான வெற்றியை ஏற்காடு சட்டமன்ற தொகுதி அளித்ததன் மூலம் ஏற்காடு முதல்வர் ஜெயலலிதாவின் எக்கு கோட்டையாக உள்ளது என்படை நிரூபித்து காட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் 2 1/2 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றதன் மூலம் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.எம்.ஜி.ஆர்.11 ஆண்டுகளும், ஜெயலலிதா 12 ஆண்டுகள் முடித்து 13 வது ஆண்டிலும் அடி எடுத்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆளும் உரிமையை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். அதிமுகவிற்கு ஜெயலலிதா பொறுப்பேற்று 25 ஆண்டுகளில் சோதனைகள்,வேதனைகளை எல்லாம் தாங்கி யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழ்கிறது. தமிழக மக்கள் ஏற்ற தாழ்வுகள் இன்றி வாழும் வகையில் அவர்களின் சமூக பாதுகாப்பிற்காக ரூ.43 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.100 ஆண்டுகாலம் எதிர்கால சந்ததியினர்களஉம் அந்த பலனை பெறுவதற்காக ஜெயலலிதா லட்சிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். 1 கோடியே 85 லட்சம் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கி உண்ண உணவு வழங்கியவர். வீடற்ற மக்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
ஏழை பெண்கள் திருமணத்திற்காக 25 ஆயிரம் பணமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும், அதுவும் படித்து பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரமும்,தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல திட்டங்களுக்காகதான் ஏற்காடு தொகுதி மக்கள் இந்த வரலாற்று மிக்க வெற்றியை தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வீட்டு பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ_மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கல்வி தாயாக விளங்கி வருகிறார்.
யாரும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்ல முடியாத ஆட்சியாக தமிழத்தில் அதிமுக வழங்கி வருகிறது.சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றோம். இதன் மூலம் நமது இயக்கத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 4 ஆயிரம் பேர் பதவி பெற்றுள்ளனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏற்காடு தேர்தலில் மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கி தந்துள்ளீர்கள். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தா வெற்றி பெறுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதன் பிறகு நடந்த இடைத் தேர்தலிலும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற வாக்குகள் கேட்டோம். அதுபோல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நமது களப்பணியானது ஜெயலலிதாவை பிரதமராக்க வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். அதற்குதான் நிங்கள் பெற்று தந்த வெற்றி அடித்தளமாக அமைந்துவிட்டது என்று சொன்னேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர்களுக்கு ஏற்காடு எம்.எல்.ஏ.சரோஜா நன்றி தெரிவித்து பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ்,விஜயலட்சுமி பழனிசாமி,பல்பாக்கி கிருஷ்ணன், எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,மாதேஸ்வரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், சேலம் மேயர் சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன்,மண்டல தலைவர்கள் தியாகராஜன்,மாதேஸ்வரன்,சண்முகம், பிரகாஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.துரைராஜ், மாணவரணி செயலாளர் சக்திவேல், மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி,பாசறை செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மேட்டூர் நகர சபை தலைவர் லலிதா சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வாழப்பாடி பேரூராட்சி தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.