எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கணிதன்' இசை வெளியீட்டு விழா
'கணிதன்' இசை வெளியீட்டு விழா
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் 'கணிதன்'. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்தது. இசையை ஏ.ஆர் ரகுமான் வெளியிட ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் இயக்குநர் எஸ் ஏ.சந்திரசேகரன் பேசும் போது " ஒரு படம் வெற்றியடையும் போது அது படத்தை இயக்கிய இயக்குநருக்கு வெற்றியை மட்டுமல்ல அவருடன் இருக்கும் உதவியாளர்களுக்கும் வாய்ப்பை, வாழ்க்கையையும் தேடித் தருகிறது. புதுமையாக கதை சொல்லும் இயக்குநர்களுக்காக தாணுசார் மாதிரி எத்தனையோ தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்க தயாராகக் காத்திருக்கிறார்கள். " என்றார்.
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது " இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர். நான் 'துப்பாக்கி' படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் 'கத்தி' படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள்.அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்குஅவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த தாணு சார்.
என் உதவியாளர்கள் 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர், 'கணிதன்' சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள். தமிழ்த்திரையுலகில் 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் 'கணிதன்' படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும்.
'கணிதன்' இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர். நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை. காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது.
காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை. நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை கண்டுபிடிக்கமுடியும்;அடையாளம் காணமுடியும்.நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார் ,விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.
நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது. சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும். இந்த'கணிதன்' படமும் அப்படித்தான். எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு முருகதாஸ் பேசினார்.
'தெறி'பட இயக்குநர் அட்லி பேசும் போது " இயக்குநர் சந்தோஷ் எனக்கு நீண்டநாள் நண்பர் அவரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நான் சாதாரண ஆள் .என்னை ரகுமான் சார் இருக்கும் இந்த மேடையில் ஏற்றியவர் தாணுசார். அடுத்தவர்களை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பவர் அவர். ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்றால் தாணுசார் போல் இருக்கவேண்டும் என்பேன். என் அப்பாவிடம் 100 ரூபாய் பேட்டால் கூட 10 கேள்வி கேட்பார். ஆனால் இவர் கோடிக்கணக்கில் தருவார்.தயாரிப்பாளர் என்றால் தாணுசார் போல்தான் இருக்கவேண்டும்'' என்றார்.
நாயகன் அதர்வா பேசும்போது'' ஒரு நாள் தாணு சார் சந்தோஷிடம் என்னைக் கதை கேட்கச் சொன்னார். சந்தோஷ் சொன்ன இந்தக் கதை எனக்குப் பிடித்து இருந்தது. ஆனால் சற்றுப் பயமாக இருந்தது. நம்மால் முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? என்று பயமாக இருந்தது. சிறு வயதில் சிவமணிசாரின் டிரம்ஸ் வாசிப்பைக் கேட்டு நான் டிரம்ஸ் வாங்கி வாசிக்க முடியாமல் வீட்டில்என்னைக் கழுவிக் கழுவி ஊற்றினார்கள் ரகுமான் சார் ,ஏ.ஆர் முருகதாஸ்சார் இவர்கள் இருவருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்." என்றார்.
நாயகி கேத்தரின் தெரசா பேசும்போது "இது எனக்கு முக்கியமான விழா இது நான் ஒப்பந்தமான 2 வது படம். கதை கேட்டேன், பிடித்தது. ஒரு படத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்த இசை முக்கியம். இதில் அந்த இசை நன்றாக வந்துள்ளது. இது கருத்துள்ள கமர்ஷியல் படம் . " என்றார்.
படத்தின் இயக்குநர் டி.என் .சந்தோஷ் பேசும்போது ,''என்னைக் கவர்ந்தவர்கள்,பாதித்தவர்கள் 4 பேர். ஒருவர் என் அப்பா நாராயணன். இப்போது அவர் இல்லை. இன்னொருவர் இயக்குநர் ஷங்கர் சார்,நாலு வயதில் அவரது ஜென்டில் மேன் பார்த்து வியந்தேன். இன்னும் ஒருவர் முருகதாஸ்சார் அவரிடம் உதவியாளராகி விட்டேன். மற்றொருவர் ரகுமான் சார். இவர் இசையில்தான் முதல் படம் இயக்குவது என்று ஆசைப்பட்டேன் அவர் ஆஸ்கார் விருது வாங்கியதும் அந்த ஆசையை விட்டு விட்டேன். கதை பண்ணுவது கஷ்டமில்லை. அதை நினைத்தபடி எடுப்பது சுலபமில்லை. தாணுசார் கேட்கிறதை எல்லாம் கொடுத்து ஊக்கம் கொடுத்தார். 'துப்பாக்கி' யைப் போலவே இதற்கும் செலவழித்துள்ளார்''.என்றார்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பேசும்போது, " இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகும் போதும் உங்களைப் பார்க்கும்போது குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பது போல உணர்கிறேன். சற்று இடைவெளி விட்டு ஒவ்வொரு நிகழ்ச்சி போகும் போதும் முகங்கள் மாறுகின்றன. அதற்குள் புதிய ஜீனியஸ்கள் வந்து விடுகிறார்கள். டிரம்ஸ் சிவமணிக்கு இந்தப் படம் இசை எல்லாம் ஒரு அடிப்படையான விஷயம்தான். அவருக்குள் இருக்கும் தங்கச்சுரங்கம் இனிமேல்தான் வெளிவரப் போகிறது.''என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நன்றியுரை ஆற்றும் போது,'' பத்திரிகையாளர் நண்பர்களே, ஊடக நண்பர்களே படத்தின் விளம்பரங்களில் 'உங்கள் குரலாய் கணிதன், உங்களுக்காக கணிதன் 'என்று போடச் சொன்னேன். உங்களுக்காக 'கணிதன்' குரல் கொடுப்பான். நீங்கள் கரம் கொடுப்பீர்''என்றார்.
இவ்விழாவில் டிரம்ஸ் சிவமணியின் குருநாதர்களான இசை மேதைகள் விக்கு விநாயக்ராம் ,காரைக்குடி மணி ஆகியோர் பங்கேற்றனர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் மதன்கார்க்கி,டிரம்ஸ் சிவமணி,வில்லன் நடிகர் தருண் அரோரா ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.முன்னதாக டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025 -
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
03 Sep 2025சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை
03 Sep 2025புதுடெல்லி : ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜ
-
நாளை நடக்கும் கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை: செங்கோட்டையன்
03 Sep 2025ஈரோடு : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Sep 2025சென்னை : தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - இ.பி.எஸ்.
03 Sep 2025சென்னை : தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
03 Sep 2025திண்டுக்கல் : பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
03 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தினார்.
-
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
03 Sep 2025சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழி பெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை
03 Sep 2025சென்னை : தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
-
அமைதி - போர் 2-ல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உலகம் : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
03 Sep 2025பெய்ஜிங் : அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அ
-
சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு
03 Sep 2025கொழும்பு : கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்
-
முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி-அதிர்ச்சி
03 Sep 2025புதுடெல்லி : பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
-
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 Sep 2025மதுரை : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டி.ஜி.பி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
03 Sep 2025சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் எம்.பி. பதில்
03 Sep 2025சென்னை : கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது?
-
பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
03 Sep 2025புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க திட்டம்
03 Sep 2025சென்னை : தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் மின்சார தேவை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
-
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு
03 Sep 2025சென்னை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பணிக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
03 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண
-
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஷ்வர் குமார்
03 Sep 2025மும்பை : இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
03 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
-
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பேரிடர் ஒத்திகை
03 Sep 2025ராமேசுவரம் : ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்
03 Sep 2025சண்டிகார் : கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.
-
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை மோடி அரசு ஓயாது: அமித்ஷா
03 Sep 2025புதுடெல்லி : நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.