எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படவுள்ளதாக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2016 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அகவிலைப்படி உயர்வு
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக்காகவே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரின் வழியில் செயல்படும் நான், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.7.2016 முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
7 சதவீதம் உயர்வு
திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு 1.7.2016 முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 1.7.2016 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும்.
அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு 427 ரூபாய் முதல் 5,390 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 214 ரூபாய் முதல் 2,695 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.
18 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்
1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் இந்த அகவிலைப்படி உயர்வு சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக 1,833 கோடியே 33 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத்தொடங்கிய எரிமலை
03 Aug 2025மாஸ்கோ : 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் - ஹமாஸ்
03 Aug 2025காசா : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் என்று ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் மாயமான இந்தியர்கள் 4 பேர் மரணம் : போலீசார் தீவிர விசாரணை
03 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
-
காசாவில் தொடரும் துயரம்; கூட்ட நெரிசலில் 48 பேர் பலி
03 Aug 2025ஜெருசலேம் : காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.
-
5.4 ரிக்டர் அளவில் பாகிஸ்தானின் நிலநடுக்கம்
03 Aug 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
-
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு
03 Aug 2025சென்னை : 2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக ட்ரம்ப் ஆருடம்
03 Aug 2025வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்காது என கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: இன்டியா கூட்டணி 7-ம் தேதி ஆலோசனை
03 Aug 2025ஜம்மு : பீகார் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ம் தேதி இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடப்பதாக பரூக் அப்துல்லா கூறியுள்ளார்
-
தீரன் சின்னமலைக்கு துணை முதல்வர் புகழாரம்
03 Aug 2025சென்னை : விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை - அடிமைத்தனத்தை வீழ்த்துவோம் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-08-2025.
03 Aug 2025 -
நடிகர் மதன் பாப் உடல் தகனம்
03 Aug 2025சென்னை : மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
விடுமுறை தினம் எதிரொலி: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
03 Aug 2025கன்னியாகுமரி : விடுமுறை தினத்தையொட்டி. ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.
-
இந்தோனேசியாவில் 20 கி.மீட்டர் உயரம் வெடித்து சிதறிய எரிமலை : விமானங்கள் பறக்க தடை
03 Aug 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் பரிதாப பலி
03 Aug 2025லக்னோ : உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
துப்பாக்கி முனையில் சென்னையில் பிரபல ரவுடி கைது
03 Aug 2025சென்னை : 5 கொலை உட்பட 22 குற்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
-
தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு இ.பி.எஸ். மரியாதை
03 Aug 2025சென்னை : விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
சித்தராமையாவுக்கு கன்னடத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்
03 Aug 2025சென்னை : கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பெருமிதம்
03 Aug 2025சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்த்து சீமான் நூதன போராட்டம்
03 Aug 2025தேனி : தேனி மாவட்டம் முந்தல் பகுதியில், கால்நடை மேய்ச்சல் நில உரிமை கோரி, போலீசாரின் தடையை மீறி விவசாயிகளுடன் இணைந்து சீமான், வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்த்து நூதன
-
கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை: ஓ.பி.எஸ். எச்சரிக்கை
03 Aug 2025சென்னை : கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
03 Aug 2025தென்காசி : குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
-
ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
03 Aug 2025புதுடில்லி : டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது.
-
முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக.18-ல் துவக்கம்
03 Aug 2025சென்னை : பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் ஆக. 18 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் : திருமாவளவன் வலியுறுத்தல்
03 Aug 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்ட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
-
குரில் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
03 Aug 2025குரில் தீவுகள் : ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது.