எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தந்மை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று தெரிவித்தார்.
ராமாநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.5 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. .இந்தப்பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் 200 அடி நீளத்தில் 836 டன் எடையில் தூக்கு பாலம் இரு பிரிவாக மேல்நோக்கி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலம் அமைக்கப்ப்டடு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடல் காற்றின் அரிப்பு ஏற்ப்டடு தன்மை இழந்து வந்ததால் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் 6 டன் எடையளவி்ல் பாலத்தின் வலுவை அதிகப்படுத்தும் வகையில் தூக்குபாலத்தில் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்து பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்றார்.அங்கு ரயில் தூக்குப்பாலத்தில் ரயில் செல்லும்போது அதன் அதிர்வுத்தன்மை குறித்து பொறியாளர் சுயம்பு லிங்கம் ஆய்வு செய்தார்.அதன பின்னர் பாலத்தில் பொறுத்தப்பட்டிருந்த பாலம் முழு திறன் ஆய்வு கருவில் பதிவான அதிர்வின் அளவு குறித்து பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தது. பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கும் பாலத்தில் வலு 6 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ள.மேலும் 1 டன் எடையளவு இரும்பு பட்டைகள் பொருத்தப்படவுள்ளது.தூக்கு பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதன் அதிரிவுத்தன்மையை அறிய தூக்கு பாலத்தில் 14 இடங்களில் பாலம் முழு திறன் ஆய்வு கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் தூக்கு பாலத்தின் அதிர்வுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டறிந்து அதன் பின்னர் எந்த பகுதியில் கடல் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அப்பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தும் நடைபெற்று வருகிறது.
பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத்து பாலத்தை மாற்றி ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எனவும், ஒரு பகுதியாக மேல் நோக்கி திறக்கும் வகையிலும்,எலக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் இல்லாதபோது ஊழியர்கள் திறக்கும் வையிலும் அமைக்கப்படும் எனவும்,இந்த பாலம் இங்கிலாந்து நாட்டிலுருந்து வலு திறன் கொண்ட அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார்.மேலும் பணிகள் நடைபெறும்போது பாலத்தில் 15 நாட்கள் மட்டும் ரயில் போக்குவரத்து பாலத்தில் நிறுத்தப்படும் எனவும்,அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனுவம்,ராமேசுவரம் பகுதி்ககு ரயிலில் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக மண்டபம் ரயில்நிலையத்திலிருந்து வாகனம் இயக்கப்படும் என தெரிவித்தார்.
இப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மின்சார இணைப்பில் ரயில் இயக்க முடியும்,100 ஆண்டுகளுக்கு கடல் காற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.மேலும் பாலத்தில் தூக்குப்பாலம் பணிகல் மற்றும் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்ததவுடன் பாலத்தில் தற்போது 15 முதல் 45 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களை 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ராகுல் நாளை கூடலூா் வருகை
11 Jan 2026நீலகிரி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு நாளை வருகை தரவுள்ளாா்.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.


