எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஏப்ரல் 2 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்ததாவது:போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995 ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 22வது வருடமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மற்றும் ஏப்ரல் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.இப்போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. அருகாமையிலுள்ள மாவட்டங்களின் எல்லை பகுதிகள், குடிசைபகுதிகள், பணி நிமித்தம் இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 2859 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட 3,21,296 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிகளில் சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய் துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று செயல்பட உள்ளன. முகாம் நாளன்று முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 9504 பணியாளர்களும், 352 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 12 சிறப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 30-ம் தேதிகளில் பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே எத்தனைமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும், போலியோ நோய் பாதித்த குழந்தைகள் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்க இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


