எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக். - 24 - உள்ளாட்சி தேர்தல் மூலம் 6 பெண் மேயர்களை உருவாக்கி மகளிருக்கு முக்கியத்துவம் தந்து மகளிர் மேம்பாட்டுக்கு வழிவகை செய்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது அவரது மகத்தான சாதனையாகும். தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதா, உள்ளாட்சி அமைப்புகளில் அதை விட கூடுதல் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி மகளிரை கவுரவப்படுத்தி உள்ளார். மொத்தமுள்ள 10 மாநகராட்சியில் 6 மாநகராட்சிகளில் பெண்களை மேயர் வேட்பாளர்களாக அறிவித்து அவர்கள் வெற்றியடைந்து மேயர் பதவியை பிடித்துள்ளனர். திருச்சியில் ஜெயாவும், வேலூரில் கார்த்திகாயினியும், நெல்லையில் விஜிலாசத்தியானந்தமும், ஈரோட்டில் மல்லிகா பரமசிவமும், திருப்பூரில் விசாலாட்சியும், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவும் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மேயர்களில் மிகவும் இளையவர் வேலூர் கார்த்திகாயினி ஆவார். இவருக்கு 28 வயதே ஆகிறது. நானோ தொழில்நுட்பத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். பெண் மேயர்களில் அதிகம் படித்தவரும் இவரே. கார்த்திகாயினி கூறுகையில், திடக் கழிவுகளை அகற்றுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன். ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நெல்லை மேயர் விஜிலா கூறுகையில், அரசியலில் அதிகளவு பெண்கள் நுழைவதன் மூலம் இந்த அமைப்பை புனிதமாக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளனர். வெளிப்படையான லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதே குறிக்கோள் என்றார். திருச்சி மேயரான ஜெயா, வரலாற்று முதுகலை பட்டம் பெற்றவர். அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கான இலவச மாங்கல்ய திட்டம், திருமண உதவி திட்டம் போன்ற திட்டங்கள் எனக்கு உதவி புரிந்தன என்றார். பெண் மேயர்களாக வெற்றி பெற்றிருப்பவர்களில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருப்பூர் விசாலாட்சி ஆவார். வெற்றி பெற்றவர்கள் அனைவருமே முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தால் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றுவோம். செயல்படுத்தப்படும் திட்டங்களை எந்த குறைபாடுகளுமின்றி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உறுதிபட கூறியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பெண்களுக்காக மகளிர் காவல் நிலையம், தாலிக்கு தங்கம், இலவச திருமண நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என அறிவித்து விட்டு அதனை செயல்படுத்தாமல் மத்திய அரசும், கடந்த கால தி.மு.க அரசும் வாயளவிலேயே பேசிக் கொண்டிருந்தன. மத்திய அரசும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வராமல் இழுத்தடித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மகளிரும் மனதார பாராட்டுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.


