எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, அக். - 24 - உள்ளாட்சி தேர்தல் மூலம் 6 பெண் மேயர்களை உருவாக்கி மகளிருக்கு முக்கியத்துவம் தந்து மகளிர் மேம்பாட்டுக்கு வழிவகை செய்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது அவரது மகத்தான சாதனையாகும். தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதா, உள்ளாட்சி அமைப்புகளில் அதை விட கூடுதல் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி மகளிரை கவுரவப்படுத்தி உள்ளார். மொத்தமுள்ள 10 மாநகராட்சியில் 6 மாநகராட்சிகளில் பெண்களை மேயர் வேட்பாளர்களாக அறிவித்து அவர்கள் வெற்றியடைந்து மேயர் பதவியை பிடித்துள்ளனர். திருச்சியில் ஜெயாவும், வேலூரில் கார்த்திகாயினியும், நெல்லையில் விஜிலாசத்தியானந்தமும், ஈரோட்டில் மல்லிகா பரமசிவமும், திருப்பூரில் விசாலாட்சியும், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவும் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மேயர்களில் மிகவும் இளையவர் வேலூர் கார்த்திகாயினி ஆவார். இவருக்கு 28 வயதே ஆகிறது. நானோ தொழில்நுட்பத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். பெண் மேயர்களில் அதிகம் படித்தவரும் இவரே. கார்த்திகாயினி கூறுகையில், திடக் கழிவுகளை அகற்றுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன். ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நெல்லை மேயர் விஜிலா கூறுகையில், அரசியலில் அதிகளவு பெண்கள் நுழைவதன் மூலம் இந்த அமைப்பை புனிதமாக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளனர். வெளிப்படையான லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதே குறிக்கோள் என்றார். திருச்சி மேயரான ஜெயா, வரலாற்று முதுகலை பட்டம் பெற்றவர். அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கான இலவச மாங்கல்ய திட்டம், திருமண உதவி திட்டம் போன்ற திட்டங்கள் எனக்கு உதவி புரிந்தன என்றார். பெண் மேயர்களாக வெற்றி பெற்றிருப்பவர்களில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருப்பூர் விசாலாட்சி ஆவார். வெற்றி பெற்றவர்கள் அனைவருமே முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தால் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றுவோம். செயல்படுத்தப்படும் திட்டங்களை எந்த குறைபாடுகளுமின்றி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உறுதிபட கூறியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பெண்களுக்காக மகளிர் காவல் நிலையம், தாலிக்கு தங்கம், இலவச திருமண நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என அறிவித்து விட்டு அதனை செயல்படுத்தாமல் மத்திய அரசும், கடந்த கால தி.மு.க அரசும் வாயளவிலேயே பேசிக் கொண்டிருந்தன. மத்திய அரசும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வராமல் இழுத்தடித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மகளிரும் மனதார பாராட்டுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
கொரோனா பரவலை முதலில் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை மேலும் நீட்டிப்பு
21 Sep 2025பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை பற்றி முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
அமெரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை
21 Sep 2025நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.