முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல்வாங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், அக். - 30 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை நடக்கும் சூரசம்ஹார லீலைக்காக இன்று மாலை வேல்வாங்கும் விழா நடக்கிறது. முருகப் பெருமானின் முதல் படைவீடு எனும் சிறப்பு பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 26 ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு கோயில் மண்டபங்களில் தங்கி விரதமேற்கொண்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. அதன் முன் நிகழ்ச்சியாக இன்று வேல்வாங்குதல் நடக்கிறது. அதை முன்னிட்டு மாலை 6 மணியளவில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து சிவபெருமான் கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு கோவார்த்தனாம்பிகை அம்பாளிடம் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெற்று நந்தியை வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு 7 மணிக்கு முருகப் பெருமான், தெய்வானை அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தில் ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago