எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்கள்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,710- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.16000- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 6 சட்டப்பட்டதாரிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான ஊக்குவிப்பு தொகைகளையும், மார்ச்-2016 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்ற ஒரு மாணவருக்கு ரூ.20000-க்கான ரொக்கப்பரிசினையும், மீன்வளத்துறை சார்பாக ரூ.2,41,000- மதிப்பில் 10 மீனவர்களுக்கு மானியத்துடன் 7எச்பி குதிரை திறன் கொண்ட படகுக்கான மோட்டார்களையும், 2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மீனவ மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2,70,000- மதிப்பிலான அம்மா ஆட்டோவினையும், விளையாட்டுத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு ஓடி விளையாடு பாப்பா திட்டத்தின் கீழ் ரூ.7,50,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.3,20,000- (அரசு மானியம் ரூ.75,000-) மதிப்பிலான மினி டிராக்டரையும், வேளாண்மைத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,343- மதிப்பிலான இடுபொருடகளையும், வருவாய்த்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வழங்கக்கூடிய விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.92,000- மதிப்பிலான ரொக்கப்பரிசுகளையும் என 97 பயனாளிகளுக்கு ரூ.18,12,173- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் நன்றியுரையாற்றினார். இப்பொருட்காட்சியானது 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம் சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ மாணவியர்களுக்கு ரூ.5.-மாக வசூலிக்கப்படுகிறது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,
அமைச்சர் பேச்சு
கடலூர் நகருக்கு எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கூட ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்தபோது கடலூர் கோட்டையை மையப்படுத்தி இங்கே தலைநகராக கொண்டுதான் இராஜ்யத்தை ஆண்ட வரலாறு கடலூருக்கு உண்டு. அந்த நேரத்தில்தான் ஆங்கிலேயர்களால் கடலூர் துறைமுகம் நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்புமிக்க கடலூரிலே இன்று அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-16 வரை நடைபெற்ற அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் பொற்கால முதல்வராக இருந்து தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பயனாக மக்களை மட்டுமே நம்பி தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சகாப்தம் படைத்து வெற்றிப்பெற்று மீண்டும் அம்மா முதல்வராகி சாதனை படைத்தார்கள்.
தொடரும் அம்மாவின் அரசு
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூடிய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மா கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், சொல்லாத திட்டங்களையும் தந்துள்ளேன், மீண்டும் சட்டமன்றம் கூடும்போது நான் தமிழக மக்களால் முதலமைச்சராக வெற்றிப்பெற்று இங்கு வருவேன், இந்த ஆட்சியே தொடரும் என்று சொல்லி தேர்தலை சந்தித்தார்கள். இதற்கு அம்மா அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தையரித்தால்தான் மீண்டும் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தார்கள். மேலும் அக்கூட்டத்தில் அம்மா நான் இருக்கும்வரையிலும் எனக்கு பிறகும் இந்த ஆட்சியே தமிழகத்தில் இனி தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னார்கள். அவர்களின் வாக்கு மெய்பிக்கப்படும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
5 திட்டங்களுக்கு கையெழுத்து
அம்மா தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றே கையொப்பமிட்டு செயல்படுத்தி வந்தார்கள். அதேபோல் தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்களின் வழியில் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படி தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வந்தார்கள். மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு மூலமாக டிஜிட்டல் உரிமையை பெற்று தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இன்று அம்மா அவர்களின் இலட்சியம் மற்றும் கனவு நிறைவேறும் வகையில் அரசு மத்திய அரசு மூலம் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த அரசு அம்மாவின் அரசு என்பதை நிருபித்து நல்லாட்சி நடத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறாக அரசு துறைதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு நகரங்களிலும் பொருட்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூரில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்கள் என்னென்ன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற ஒரு மகத்தான சாதனமாக இந்த பொருட்காட்சி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.