எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அக்ரினி குடியிருப்பில் உள்ள வசுதாரா குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.
மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். குப்பைகளையும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியும். மேலும் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. எனவே நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாடித் தோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய இடம் இருந்தாலே இதற்கு போதுமானது. மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் மாடித் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து சுத்தமான காய்கறிகளை பெறலாம். மாநகராட்சி என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்ததுதான். எனவே சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு அனைவரும் முன் உதாரணமாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம்;. இந்த நிலைமையை மாற்றி மட்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மட்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எவைஎவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மட்கும் குப்பையிலிருந்து உரமும் மட்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் திரு.சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் திரு.செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், செயற்பொறியாளர் திரு.சேகர், வசுதாரா அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் திரு.எல்.சுரேஷ், இணை செயலாளர் திரு.மோகன், பொருளாளர் திரு.நாகராஜன், என்லைட் டிரஸ்ட் நிறுவனர் செல்வி.ப்ரியதர்சினி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் குடியிருப்;போர் சங்கத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மணமகளுக்கு தங்கத்துடன் இலவச பட்டுச்சேலை: இ.பி.எஸ்., வாக்குறுதி
22 Jul 2025கும்பகோணம் : ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
22 Jul 2025சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்
22 Jul 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
-
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
22 Jul 2025மும்பை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
-
குரூப்-4 தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
22 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வர்கள் விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
-
வரும் 26-ம் தேதி வரை 4 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்
22 Jul 2025சென்னை : வரும் 26-ம் தேதி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கதேச விமானம் விபத்து: உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
22 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர்.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
22 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனையானது.
-
குரூப் 4 மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Jul 2025சென்னை : குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
22 Jul 2025தூத்துக்குடி, வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஆலோசனை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் என முதல்வர்
-
முறியடிக்கப்படாத சாதனை
22 Jul 2025இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார்.
-
குரூப்-4 தேர்வு விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி: டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
22 Jul 2025சென்னை, குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆக.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம்
22 Jul 2025சென்னை : மெட்ரோ ரயிலில் பயணிக்க 1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மத்திய, அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
22 Jul 2025புதுடெல்லி, மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரச
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு
22 Jul 2025மான்செஸ்டர் : மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
-
ஜப்பான்: பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி
22 Jul 2025டோக்கியோ : ஐப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளது.
-
வரும் 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு: சபரிமலையில் தரிசனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியது
22 Jul 2025தேனி : சபரிமலையில் வருகிற 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு தரிசனத்திற்கு முன்பதிவுகள் தொங்கின.
-
பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்பட 10 பிராந்திய மொழிகளில் வெளியீடு
22 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்ளிடட் 10 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் ட்ரம்ப் : அமெரிக்க ஊடக செயலாளர் பெருமிதம்
22 Jul 2025வாஷிங்டன் : இந்தியா- பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் ட்ரம்ப் எனறு அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறினார்.
-
தற்போது நலமுடன் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
-
4-வது டெஸ்ட்: இங்கிலாந்தின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம்
22 Jul 2025மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.