எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கறவை மாடுகளில் பால் உற்பத்தியைப் பெருக்க நல்ல தீவனம், காற்று வசதி, நோய் தடுப்பு முறைகள், இயற்கை சார்ந்த சூழல் ஆகியவை முக்கியமாகும். கறவை மாடு வளர்ப்பு பல சோதனைகளையும் கடந்து பண்ணையாளர்களுக்கு தினசரி தொடர் வருமானத்திற்கு இன்றளவும் உதவியாய் இருக்கிறது. பண்ணையளவில் பொருளாதாரம் சார்ந்த இடர்கள் பலவும் இருந்தாலும், நோய்கள் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் நோய் வராது தடுக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
கறவை மாடுகளை வாங்கும்போது மடி மற்றும் காம்புகளின் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். மாடுகளை கழுவி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் கறவை முறையின் காரணமாகவும், காய்ந்த நிலையில் பால் கறப்பதினாலும் மடிக்காம்புகளில் வெடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படும்.
கறவை மாடுகளில் மடிசார்ந்த நோய்கள் : நோய்கள் பல இருந்தாலும் ஒரு சில நோய்கள் பொருளாதார இழப்பு அதிக அளவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதில் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டது கறவை மாடுகளின் மடி சார்ந்த நோய்களாகும். இதுபற்றிய விழிப்புணர்வு பண்ணையாளருக்கு அவசியம் பல ஆராய்ச்சி முடிவுகளின் படி கறவை மாடுகளில் 50 விழுக்காடு நோய்கள் மடி சார்ந்தவையாக இருப்பது அறியப்படுகிறது.
மடிசார்ந்த நோய்கள் : மடிநோய் என்பது பெரும்பாலும் தொற்றுநோயாக இருக்கும்.
சில நேரங்களில் மடிக்கட்டும் ஏற்படும். மடியின் முன்புறம் முன்கால்கள் வரை நீர் கோர்த்துக் காணப்படும். கோடை மற்றும் மழைப் பருவம் மாறும் சூழலிலும், கோமாரி (கசப்பு) நோய் கண்ட மாடுகளிலும் சுகாதாரக் குறைவான கறவை முறைகளிலும் மடியில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். தலை ஈத்து மாடுகளிலும், முறையற்ற முரட்டுத்தனமான கறவைப் பழக்கம் உள்ள பண்ணைகளிலும் மடிக்காம்பில் வெடிப்பு மற்றும் காயங்கள் காணப்படும்.
மடிநோயின் அறிகுறிகள் : மடிநோய் உள்ள மாடு, மடி வீங்கி அல்லது கல்போல இருக்கும். கை வைத்தால் காலைத் தூக்கும். உதைக்கும். பாலில், வெள்ளை நிறம் தவிர வேறு எந்த நிறம் (மஞ்சள், இளஞ்சிவப்பு) கண்டாலும் அது மடிநோய் எனலாம். அது போலவே பாலில் ஏதேனும் திரி அல்லது நூல் போல பொருள் தென்பட்டாலும் மடிநோய் தான். பாலை, நாவின் நுனியில் ஒரு சொட்டு வைத்துச் சுவைத்தால் அதில் சிறிது உப்புச்சுவை இருந்தால் மடிநோய் இருக்கலாம். இரண்டு ஈற்றுக்கு மேலே உள்ள மாடுகளில் கன்று ஈன்றவுடன் மடிநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
கறவை மாடுகளில் மேற்கண்ட எந்த அறிகுறிகள் தனித்தோ அல்லது கலந்தோ காணப்படும் சூழலில் அதை மடிநோய் என்று மனதில் கொண்டு உடன் முதலுதவி செய்வது நலம். பெரும்பாலான நேரங்களில், உடன் மருத்துவ உதவி கிடைக்காத போது நோயின் தன்மை தீவிரமடைந்து பாதிப்பு அதிகமாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மடிநோய்க்கான மரபு சார்ந்த மூலிகை முதலுதவி குறிப்புகள் : முதலில்,மடிநோய் கண்ட மாடுகளின் மடியினை நீர்விட்டு தேங்காய் நார் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். பிறகு அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து விடவும். மடியில் நீர் ஈரம் காயும் முன்பு கீழ்க்கண்ட முறையில் விளக்கப்படும் மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும். சோற்றுக்கற்றாலை மடல் - எடை 250 கிராம்(ஒன்று அல்லது இரண்டு) (முழு மடல்) மஞ்சள் தூள் - எடை 50 கிராம் (சமையலுக்கு பயன்படுவது) (ஒரு சாம்பார் கரண்டி அளவு)
சுண்ணாம்பு - எடை 20 கிராம்(வெற்றிலைக்கு போடுவது) (ஒரு கொட்டைப்பாக்கு அளவு)
சோற்றுக்கற்றாழை ஒன்று அல்லது இரண்டு மடல் (250 கிராம்) எடுத்து, தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மஞ்சள் தூள் (50 கிராம்) எடுத்து அந்த பாத்திரத்தில் போடவும். பிறகு சுண்ணாம்பு (20 கிராம்) சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து மின்அரவை இயந்திரம் அல்லது ஆட்டு கல்லில் மை போல அரைத்துக் கொள்ளவும். இந்த மூலிகை மருந்துக் கலவை ஒரு மாட்டிற்கு ஒரு நாள் முழுவதும் தடவ வேண்டிய அளவாகும்.
மடியில் மருந்து தடவும் முறை : முதலில், கூறியுள்ள படி நோய் கண்ட மாடுகளின் மடியினை தேய்த்துக் கழுவி அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து மடியின் நீர் ஈரம் காயும் முன்பு மேற்கண்ட மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும்.
ஒரு கை அளவு மேற்கண்ட மூலிகை மருந்துக் கலவையை ஒரு குவளையில் இட்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கைகளால் கரைத்து மடியின் அனைத்து பகுதியிலும் கைகளால் தேய்த்து விடவும். தேய்க்கும்பொழுது கீழே மருந்து சொட்ட வேண்டும். கெட்டியாக தடவக்கூடாது. இந்த மருந்துக் கலவையை ஒரு நாளைக்கு, எட்டிலிருந்து பத்து முறை தடவ வேண்டும். ஒவ்வொரு முறை மருந்து தடவும் முன்பும் மடியில் நீர் தெளித்து நன்கு மடியினைக் கழுவி பாலைக் கறந்து விடவும். ஒரு நாளைக்கு பத்து முறை தடவ மேற்குறிப்பிட்ட மூலிகை மருந்துக் கலவை போதுமானது. இந்த முதலுதவி மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.
2.2. மடிக்காம்பு வெடிப்பு : கறவை மாடுகளின்மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5கிராம்) கல்உப்பு கலந்து நீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தெளித்து சுத்தமாகக் கழுவ வேண்டும். மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 4 பல், குப்பைமேனி 10இலை, வல்லாரை 10 இலை, வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்டப் பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடிக்காம்பில் காயம் மற்றும் வெடிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்து வெண்ணெய்யை கையில் எடுத்து வெடிப்பு மற்றும் காயம் உள்ள பகுதிகளில் மென்மையாக தடவி விடவும்.
மாடுகள் கீழே படுத்து எழும்போது மடி மற்றும் காம்புப் பகுதிகள் அழுக்காகி விடும். எனவே இந்த மருந்தினை மடி மற்றும் காம்புப் பகுதியை சுத்தம் செய்து கறவை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மேற்கூறிய மருந்தை பலமுறை தடவி விட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மடியில் உள்ள காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகள் காய்ந்த நிலையில் இருக்கக் கூடாது. மருந்து எந்த நேரமும் காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2.3. மடி அம்மை ; கறவை மாடுகளில் மடி அம்மைக் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கறக்கப்படாமல் மடிநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் பல கால் நடைகளில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். இந்த அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : திருநீற்றுப் பச்சிலை 10 இலை, துளசி 10 இலை, வேப்பிலை கொழுந்து , 10 இலை, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடி காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்த வெண்ணெய்யை கையில் எடுத்து அம்மை உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவி விடவும்.
2.4. மடிநீர்க்கோர்வை : மடிமுன்பகுதி நீர்க்கோர்வை : அதிக பால் கறக்கும் இளம் கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளில் சில மாடுகளில் மடியின் முன் பகுதி முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும். ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடிநீர்க் கோர்வைக் காணப்படும். இந்நிலை கண்ட கன்று ஈன்ற மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளைக் கூடுதலாக ஊட்ட விடுவதன் மூலமாகவும் இந்நிலையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 300 மிலி.
செய்முறை : நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து இளம் சூட்டில் 10 பல் பூண்டினை அரைத்து மஞ்சள் தூளை சேர்த்து போடவும்.
பயன்படுத்தும் முறை : எண்ணெய் சூடு ஏறியவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்து நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாமல் சுத்தமான பஞ்சு துணியினால் துடைத்து நன்கு உலர்ந்த நிலையில் 100 மிலி அளவு மருந்து கலந்து நல்லெண்ணெயை சிறிது சிறிதாக உள்ளங்கையில் ஊற்றி மடி நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் நன்கு அழுத்தி வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும்.
பின் குறிப்பு : மடிக்காம்புப் பகுதியில் கொப்புளம் மற்றும் வெடிப்பு கண்ட சமயங்களில் பால் கறவை செய்பவர்கள் மிகவும் கவனமாக கட்டை விரலை நீக்கி காயம் பெரிதாக்காமல் பாலைக் கறக்க வேண்டும்.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம் - 636001.
தொகுப்பு : து.ஜெயந்தி, ப.ரவி, மற்றும் நா.ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
05 Jan 2026சென்னை, திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை
05 Jan 2026மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் மு
-
கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கனிமொழி எம்.பி.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி: கனிமொழிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை
05 Jan 2026டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளி
-
டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், இமாமுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
05 Jan 2026புது டெல்லி, டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
-
ஆஷஸ் 5-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்
05 Jan 2026சிட்னி, ஆஷஸ் 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
57 ரன்னுக்குள்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2026
06 Jan 2026 -
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக கவர்னருடன் இ.பி.எஸ் சந்திப்பு
06 Jan 2026சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளருக்கு ஜாமீன்
06 Jan 2026புதுடெல்லி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் காற்று மாசு மேலும் தீவிரம்
06 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் தொடரும் காற்று மாசால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
06 Jan 2026புதுடெல்லி, லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



