எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி,நவ. 20- 1996 ம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு காண்டிராக்ட் கொடுப்பதற்காக ரூ. 3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஆர்.பி. பாண்டே இந்த உத்தரவை பிறப்பித்தார்.மேலும் 86 வயதான சுக்ராமுக்கு இந்த வழக்கில் ரூ. 4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றுள்ள சுக்ராம் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனை பற்றி சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறுகையில், தண்டனை பெற்ற சுக்ராம் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சுக்ராம், தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ரூ. 30 கோடி பெறுமான காண்டிராக்ட்டை அரியானா டெலிகாம் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு கொடுத்த விஷயத்தில் இவர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது சுக்ராம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்கு வயது 86 என்றும், கடந்த 12 அல்லது 13 ஆண்டுகளாக அவர் விசாரணையில் பங்கேற்று வருகிறார் என்றும் மேலும் அவருக்கு வயதாகி விட்ட காரணத்தால் வியாதிகளால் அவதிப்படுகிறார் என்றும் தனது வாழ்க்கையையே அவர் இழந்து விட்டார். எனவே அவருக்கு கருணை காட்டுங்கள் என்றும் வாதாடினார். ஆனால் சி.பி.ஐ. வழக்கறிஞர் இதை ஏற்கவில்லை. அவர் இரண்டு வழக்குகளில் குற்றவாளி. எனவே அவருக்கு கருணை காட்டக் கூடாது என்று வாதாடினார். மேலும் அவர் ஒரு எம்.பியாக இருந்தவர். அமைச்சராகவும் இருந்தவர். பொதுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். அதை மறக்கவே கூடாது என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பாண்டே சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் 1998 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரியானா நிறுவனத்தின் சேர்மன் தேவேந்திரசிங் சவுத்ரி விசாரணையின் போதே மரணமடைந்து விட்டார். 2009 ம் ஆண்டு சுக்ராம் மீது சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. தண்டனை பெற்ற சுக்ராம் காங்கிரசில் இருந்து ஒரு கட்டத்தில் நீக்கப்பட்டவர். இவர் 7 முறை எம்.எல்.ஏவாகவும், மூன்று முறை எம்.பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நரசிம்மராவ் அமைச்சரவையில்தான் இவர் தொலைத் தொடர்பு இலாகாவை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்
17 Oct 2025டெல்லி : ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
17 Oct 2025சென்னை : தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
-
எனக்கு பாம்பு காது: சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
17 Oct 2025சென்னை : எனக்கு பாம்பு காது என்ற சபாநாயகரின் பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-
திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதி பணிகள் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதிக்கான பணிகள் நடைபெறுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு
17 Oct 2025சென்னை : அரசியலில் திடீர் திருப்பமாக அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து பேசினார்.
-
அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் மாற்றிவிட்டார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் சிவசங்கர் தாக்கு
17 Oct 2025சென்னை : அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.