எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டம் என்று சொல்லகூடிய டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தான் கரும்பு சாகுபடி 70 சதவீதத்திற்கும் அதிகமாக பயிரிடப்படுகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால் கிணறு மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். ஆதலால் பணப்பயிரான கரும்பு சாகுபடி எளிதாகிறது. மேலும் முன்பட்ட பருவ சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள்.
1. கரும்பின் முளைப்பிற்கு இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கரும்பில் முளைப்புத்திறன் அதிகமாகிறது.
2. பருவமழை காரணமாக நட்ட மூன்று மாதங்களுக்கு நீர்பாய்ச்ச தேவையில்லை.
3. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் அறவே இல்லை.
4. கிணற்றில் நீர் குறைந்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் பாய்ச்சி விதை கரும்பு ஆக வெட்ட வாய்ப்பு.
5. பயிர் பராமரிப்பு ஆட்கள் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு.
6. அடுத்த அரவைப்பருவத்தில் கரும்பை முன்னதாக வெட்ட வாய்ப்பு இருப்பதால் குறித்த காலத்தில் பணம், மற்றும் வெட்டு ஆட்கள் எளிதாக கிடைக்கும் அரிய வாய்ப்பு.
7. பண்டிகை காலமாதலால் கரும்பிற்கு தேவை அதிகம்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகங்கள் : CO.0212, CO86032
நடவு முறைகள்:
1. கரணை மூலம் நடவு.
2. ஒரு பருச்சீவல்கள் மூலம்.
விதைக்கரணை தேர்வு :
1. 6 மாத கரும்பில் இருந்து மட்டுமே விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும்.
2. பூச்சிநோய் தாக்காத விதைகரும்புகளை தேர்வு செய்தல் வேண்டும்.
3. மறுதாம்புக்கரும்பில் இருந்து விதைக் கரணை தேர்வு செய்யக்கூடாது.
4. தொலைதூரம் எடுத்துச்செல்வதாய் இருந்தால் தோகை உரிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
விதைக்கரணைகளின் அளவு:
1. கரணை மூலம் நடவு செய்ய 30,000 இருபருக்கரணைகள் / ஏக்கருக்கு
2. ஒரு பருச்சீவல்கள் மூலம் நடவு ( நீடித்த நவீன கரும்பு சாகுபடி) ஏக்கருக்கு 65௦௦ நாற்றுக்கள்.
கரணை நேர்த்தி: விதைக்கரணைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெவிஸ்டின், 5 மில்லி குளோர் பைரிபாஸ் 5gm சுண்ணாம்பு, 5 கிராம் யூரியா கலந்த கரைசலால் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பவிஸ்டின் பூஞ்சான நோய்களிலிருந்தும் குளோர் பைரிபாஸ் சாறு உறிஞ்சும் பூச்சிகளிளிருந்தும், சுண்ணாம்பு வறட்சியை தாங்கவும், யூரியா முளைப்புதிறனை கூட்டவும் உதவுகிறது.
நடவு முறை: 3 அடிக்கு ஒரு பார் பிடித்து கொண்டு கரணைகளை வயலில் தண்ணீர் பாய்ச்சியபின் பார்களின் பக்கவாட்டில் இருக்கும்படி பதித்தல் வேண்டும், கரணைகளை வாய்க்காலில் பதிக்கக்கூடாது, வாய்க்காலில் பதிப்பதால் மழைக்காலமாதலால் தண்ணீர் தேங்கி கரணை அழுகல் நோய் ஏற்பட ஏதுவாகி முளைப்புதிறன் பாதிக்கப்படும்.
களைக்கொல்லி தெளித்தல்: கரும்பில் முதல் மூன்று மாதங்கள் களைகளின் தாக்கம் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றிட வாய்ப்பாக அமைந்துவிடும். நட்ட 3 ஆம் நாள் களை முளைபதற்க்கு முன்பு தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரசீன் என்ற களைக்கொல்லியை 1 kg எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்கப்பட்ட களைக்கொல்லி காலின் பாதத்தில் படாதவாறு பின்னோக்கி நடந்து தெளித்து வரவேண்டும். இது நட்ட 30 நாட்களுக்கு கோரை, அருகு தவிர அனைத்து களைகளையும் கட்டுபடுத்தும்.
அடி உரம்: மண் பரிசோதனைப்படி மட்டுமே உரமிடல் வேண்டும், மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில் ஏக்கருக்கு 4 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பார்களின் சால்களில் தூவி நட வேண்டும். தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் இடுதல், இரசாயன உரங்கள் பயிர் எடுத்துகொள்ள ஏதுவாவதுடன், மண்வளம் மேம்பாடு அடைகிறது.
உரப்பரிந்துரை : 110 : 25 : 45 தழை, மணி சாம்பல் சத்துகளை தரக்கூடிய உரங்களை 1 ஏக்கர் பயிருக்கு இடவேண்டும்.
களை எடுத்தல்: நட்ட 3௦ ஆம் நாள் ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை இட்டு லேசாக மண் அணைக்க வேண்டும், உடன் தண்ணீர் பாய்ச்சுதல் நல்லது.
இரண்டாவது களை எடுத்தல்: நட்ட 6௦ வது நாளில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா 1 மூட்டை பொட்டாஷ் உடன் வேப்பம் புண்ணாக்கு 5௦ kg கலந்து களை எடுத்து லேசாக மண் அணைக்க வேண்டும்.
மூன்றாவது களை எடுத்தல்: நட்ட 9௦ ஆம் நாள் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் ஏக்கருக்கு இட்டு நன்றாக மண் அணைத்தல் வேண்டும். இதற்கு மேல் தாமதப்படுத்தினால் போத்துக்கள் வளர்ந்து சர்க்கரை கட்டுமானம் பாதிக்கப்படும்.
வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த : எதிர்பாராத காரணங்களால் 2 மற்றும் 3 வது களை எடுக்க முடியாமல் போனால் வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த METRIBUZINE 1 KG + 2-4 D 600 gm கலந்து வளர்ந்த களைகளின் மீது தெளிப்பதால் களைகள் மட்டுப்படுத்தப்படும்.
தோகை உரித்தல்: நட்ட 5 வது மாதத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தவும், மகசூலை அதிகரிக்கவும், பின்பருவ நேர்த்திகளை செய்யவும் தோகை உரித்தல் அவசியமாகிறது. தோகைகளை கால்நடைத்தீவனமாகவும், கூரை வேயவும் பயன் படுத்தலாம்.
விட்டம் கட்டுதல்: 7 வது மாதத்தில் கரும்பு சாயாமல் இருக்க, எலி மற்றும் அணில் போன்றவற்றின் சேதத்தை தவிர்க்க விட்டம் கட்டுதல் அவசியம், கரும்பை வெட்டுவதும், வெட்டுக்கூலி குறையவும் வாய்ப்பு.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்: கரும்பு நட்ட 45, 60, 75 நாட்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 1, 1 ½ , 2 kg அளவுகளை 200 lit தண்ணீரில் கலந்து தெளிக்க மகசூல் 2௦ சதவீதம் கூடும்.
அறுவடை : நட்ட 11-12 மாதங்களில் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். கரும்பை கைக்கோடாரி கொண்டு அடியோடு வெட்டுவதால் அடிக்கரும்பில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் ஆலையின் கட்டுமானம் கூட வாய்ப்பாகும், மேலும் 5 டன்கள் கரும்பு ஏக்கருக்கு மகசூல் கூட வாய்ப்பாக அமையும். கரும்பை வெட்டியபின் தோகையை தீயிட்டு எரிக்காமல், தோகைகளை கரும்பு தோகை கம்போஸ்டாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கலாம்.மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கரும்பு மகசூலை அதிகரித்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.
கோ.செந்தில்நாதன்,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர்.
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636203.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
லக்னோவில் நடந்த இந்தியா 'ஏ'-ஆஸி. 'ஏ' டெஸ்ட் போட்டி டிரா
19 Sep 2025லக்னோ : இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே லக்னோவில் நடந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.