எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தற்பொழுது குள்ளம்பட்டி, பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி கிராமங்களில் வயல்களில் நெற்பயிர் வளர்ச்சி குன்றியுள்ளது. இதனை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர். நெற்பயிர் வளர்ச்சி குன்றியுள்ளது. மேலும் இலையுறை அழுகல் நோயின் தாக்குதலும் அதிகரித்து காணப்படுகிறது.
இப்பயிர் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.கீதா மற்றும் உதவி பேராசிரியர் (உழவியல்) மா.விஜயகுமார் ஒருங்கிணைந்த நிர்வாக முறைகளை பற்றி விளக்கியுள்ளனர். ஆய்வு செய்த வயல்களில் பச்சைபாசி அதிகம் படர்ந்து காணப்பட்டது.
இதனால் மண்ணில் காற்றோட்டம் தடைபடுவதுடன் மண்ணில் ஹைட்ரஜன் சல்பைடு வாயுக்களின் அளவு அதிகம் உற்பத்தியாகி ஒருவித துர்நாற்றத்துடன் காணப்பட்டு பயிர் வேர்வளர்ச்சி தடைபட்டு பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. மேலும் இதுவே இலையுறை அழுகல் நோய் தாக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த 1 கிலோ காப்பர் சல்பேட் (மயில்துத்தம்) மற்றும் சுட்ட சுண்ணாம்பு 1 கிலோவை நன்கு பொடி செய்து கலந்து ஒரு ஏக்கரில் இட்டு பின்பு நன்கு மிதித்து விடவும். பின் மறுநாள் நீரை வடித்து விடவும். இதனால் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு புதிய வேர்கள் உற்பத்தியாகி செழித்து வளர்ந்து அதிக மகசூல் பெற ஏதுவாக அமைகிறது.
இலையுறை அழுகல் நோய் தாக்கம் அதிக ஈரப்பதம் மற்றும் அடர்த்தியான பயிர் வளர்ச்சி நிலைகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்நோய் பொன்னி இரகங்களில் அதிகம் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய் இலையுறையில் நிறமாற்றம் ஏற்பட்டு இளம் கதிரை சுற்றியிருக்கும் இலையுறையில் அழுகல் ஏற்படுத்தியுள்ளது.
அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிற ஓரங்களுடன் சாம்பல் நிற மையத்துடனும் கூடிய ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படுகிறது. தீவிர தாக்குதலின் பொழுது முழு கதிர் அல்லது அதன் சில பகுதிகள் வெளிவராமல் தடுத்து இலையுறைக்குள்ளேயே இருக்கச்செய்து விடும். இதனால் வெளிவராத கதிர் அழுகி பழுப்பு நிறமாகவும், பின் கருமையாக மாறி விடுகிறது. கதிர்விடும் பருவம் முதல் நெற்பயிர் முதிர்ச்சி அடையும் நிலை வரை இந்நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் இடுவதன் மூலம் கதிர் அழுகல் நோயை 20 முதல் 40 சதவீதம் வரை குறைக்கலாம். நோய் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் உள்ளபொழுது நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடுவதன் மூலமும், திரவ வடிவ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 2 மில்லி 1 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து இலைவழியாக தெளிப்பதன் மூலமும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.
நோய்த்தாக்கம் தீவிரம் அடைந்த நிலையில் ஹெக்சகோனோ சோல், கார்பன்டசிம், எடிபென்ஃபாஸ், மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025