எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, டிச.15- இந்தியாவை, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ் ஆண்டுவிட்டது. தற்போது காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. தமிழ்நாட்டில் அம்மாவின் தலைமையிலான பெரும்பான்மை பெற்ற அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பென்னிகுக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டதுதான் இந்த பெரியாறு அணை
இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கடந்த 1.1.1886- ல் சென்னை ராஜதானிக்கும் (மாகாணத்திற்கும்) திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே பெரியாறு திட்டத்தின் கீழ் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 158 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டு அதில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. 152 அடி தண்ணீர் தேக்கினால்தான் அதில் இருந்து 48 அடி தண்ணீரை தமிழ்நாட்டின் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும். எனவே ஆண்டுக்கு 9600 மில்லியன் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பயன்பட்டு வந்தது. இந்த தண்ணீரை நம்பித்தான் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட உழவர் பெருமக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த மாவட்டங்களில் மக்களின் பிரதான குடிநீராகவும் பெரியாற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1973- ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து வெளிவந்த பத்திரிக்கை ஒன்றில் பெரியாறு அணை பலவீனம் அடைந்து இருப்பதாகவும், அதனால் ஆபத்து நேரிடலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இது அடிப்படையற்ற ஒரு பொய்ச் செய்தியே ஆகும். அப்போது மத்திய அரசின் வல்லுனர் குழு பார்வையிட்டு, அணை உறுதியாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சான்றளித்தது. அப்போது முதல் கேரள அரசு, அணை பலவீனம் அடைந்துள்ளதாக ஒரு திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பி வந்ததால், 25.11.1979-ல் மத்திய நீர்ப்பாசனக் குழுமத்தின் தலைவர் முன்னிலையில் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்தலாம் என்றும், தற்காலிகமாக நீர்த்தேக்க அளவு 152 அடிக்குப்பதில் 136 அடியாக இருக்கலாம் என்றும் அணையை மூன்று கட்டமாக பலப்படுத்தலாம் என்றும் முதற்கட்ட பணிக்குப்பின் 136 அடியாகவும், இரண்டாம் கட்ட பணி முடிந்தபின்பு 142 அடியாகவும், மூன்றாம் கட்ட பணிக்குப்பின் 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. உள்நோக்கோடு கேரள அரசு அணை பலவீனம் அடைந்ததாக வெற்று வதந்தியைப் பரப்பி வந்த ஒரே காரணத்திற்காக பலநூறு கோடி ரூபாயை அணையைப் பலப்படுத்தும் வகைக்காக தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. விஞ்ஞான ரீதியாக அணை பாதுகாப்பாக உள்ளது என்பதையும், அதற்காக எந்தெந்த வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டின் முதல்வர் அம்மா, உரிய புள்ளி விபரங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். அணை பலவீனம் அடையவும் இல்லை. அது உடையும் வாய்ப்பும் இல்லை. பின் ஏன் அணை உடைந்துவிடும் அப்படி உடைந்துவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து பீதியை கேரள மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது என்றால் அது சுயநல அரசியலுக்காகத்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 9.12.2011 ஆம் நாள் கேரள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள அரசு இதுவரை உள்நோக்கோடு வதந்திகளை பரப்பி வந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர் தருவோம், புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள் எனச் சொல்லி வந்த கேரள காங்கிரஸ் அரசு முந்தைய ஒப்பந்த சரத்துக்களை அப்படியே நிறைவேற்றுவோம் என ஏன் சொல்லவில்லை?
இதுநாள் வரை முல்லைப் பெரியாறு அணை பலவீனப்பட்டுள்ளதாக எந்த ஒரு வல்லுனர் குழுவும் சொல்லவில்லை. மாறாக அணை பலமாக உள்ளது என்றே தெரிவித்துள்ளன. கடந்த 27.2.2006 ஆம் நாள் உச்சநீதிமன்றம், பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சினை குறித்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் எஞ்சிய பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் முன்னர் வல்லுனர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என தமது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கிய பின் அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடும் நோக்கத்தில், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தம்)சட்டம் 2006 ஐ கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது 18.3.2006 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறுவது ஆகாதா? இதைத் தொடர்ந்து வழக்கு தற்போது 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்விடம் நிலுவையில் இருந்துவருகிறது. 152 அடி தேக்கப்பட்டால்கூட 15 டி.எம்.சி. தண்ணீர்தான் நமக்குக் கிடைக்கும். தற்போது 136 அடி தேக்கப்படுவதால் 8 டி.எம்.சி. தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. நிலைமை இப்படி இருக்க, புதிய அணையின் நீர்மட்டமே 120 அடி என்றால் தமிழ்நாடு இதுகாறும் பெற்றுவந்த நீரில் 8 ல் 1 பங்குகூட கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்? அந்த மாவட்டங்கள் எல்லாம் பாலைவனமாக மாறிவிடாதா?
முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது தென் தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சனை. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் மைய ஆட்சியில் இருந்த தேசிய கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிற காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தப் பிரச்சனை குறித்து துளியும் கவலைகொள்ளவில்லை. பிரச்சனைக்குத் தீர்வுகாண பாகுபாடின்றி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு ஆக்கப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையயையும் எடுக்காதது ஏன்? நடுவண் அரசு நடுநிலையோடு இல்லாமல் கேரளாவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவது ஏன்? மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு, கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கமா? கேரளத்தில் தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒரே ஒரு உறுப்பினர் பலத்துடன் இருப்பதால் அங்கு சமீபத்தில் நடைபெற உள்ள ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிட்டால் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் பலமும் சமமாகி அதன் பின்பு காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் அந்த அரசைக் காப்பாற்ற துடிக்கிறதா மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு?
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயக்கடமை மத்திய அமைச்சரவைக்கு (நிர்வாகத்திற்கு) உண்டு ஒருவேளை, அந்தத் தீர்ப்பு இன்றைய காலச்சுழ்நிலைக்கு ஏற்ப சமுதாய நலனுக்கு எதிராக இருப்பதாகத் தோன்றினால் அதற்கு மாற்றாக புதிய சட்ட திருத்தத்தை நிறைவேற்றித் தரக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. அப்படி நிறைவேற்றாத நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக்கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் அவமதிக்கப்படுவதற்கு மைய அரசு இடம் தரவே கூடாது. அப்படி எந்த மாநில சட்டமன்றமாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் அந்த அரசை நீக்கக்கூடிய அரசமைப்பு சட்டவிதி 356-ஐ மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்திக்காமல், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேரள காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே ஓரவஞ்சனையாக நடப்பது அநீதியிலும் அநீதி ஆகும். இது நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை எல்லாம் பறிகொடுக்க காரணமாக இருந்த கருணாநிதி, எதிலும் தாமதமாக முடிவு எடுக்கும் மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் தாமதத்தை மேற்கொள்ளாமல், நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இலக்கிய வசனம் பேசி நாடகம் ஆடுவதில் வல்லவர் கருணாநிதி என்பதை இந்த நாடே நன்கறியும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தி.மு.க. கூட்டணிக் கட்சியாக மைய அரசில் இடம்பெற்று இருப்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று தனக்குத்தானே கருதிக்கொண்டு, ஒரு மைய அரசுக்கும் தி.மு.க.வின் மைய அமைச்சர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல் இப்போது உண்ணாநோன்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் கருணாநிதி. உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசியல் தலைவர்தான் என்றால், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கக்கூடாது என்று மைய அரசை நடத்தும் காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்து இருக்க வேண்டாமா? கேரள அரசுக்கு சார்பாக காங்கிரஸ் அரசு நீடிப்பதற்காகவே தங்கள் அளவில் நாடகம் ஆடும் காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் கண்டித்து நீங்கள் தமிழ்நாட்டுக்கு பகையாக நடப்பதால், உங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்து இந்த தி.மு.க. வெளியேறுகிறது என்ற அறைகூவலை அல்லவா கருணாநிதி விடுத்திருக்க வேண்டும்!
அப்படி அறிவிக்கும் அரசியல் துணிவு கருணாநிதிக்கு உண்டா? தமிழ் இனத்துக்கு என்று ஒரு தனி ஈழ ஆட்சி நடைபெறதபடி சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு துணை போகிற காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஆதரித்தவர்தானே கருணாநிதி. அப்போதுகூட கடற்கரையில் மனைவியோடும், துணைவியோடும் ஏறத்தாழ சுமார் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாநோன்பு இருப்பதாக நாடகம் ஆடியவர்தானே இந்த கருணாநிதி
எனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கிவரும் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க அரசியல் துணிவுடன் செயல்பட முன்வருமா? அல்லது கேரள காங்கிரஸ் ஓட்டு வங்கிக்காக இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்த வழிவகுக்குமா? இதுவே தமிழ்நாட்டு மக்களின் இன்றைய கேள்வி. மத்திய ஆட்சியாளர்களே பதில்சொல்லுங்கள்...
எஸ்.முத்துமணி
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.