எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த சில மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள்.
முதல் மதிப்பெண்தான் உங்கள் லட்சியமா?
அப்படியானால் உங்கள் படிப்பு முறையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால் எல்லாப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். படிக்கும்போதே முக்கிய தகவல்களைக் கோடிட்டு வைத்துக்கொண்டு தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென தனியாக ஒரு நோட்டுப் போட்டு வைத்துக் கொண்டால் தேர்வு நேரத்தில் புரட்டிப் பார்ப்பது எளிதாக இருக்கும்.
பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்கள் வகுப்புத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி எழுதிப் பாருங்கள். இந்தப் பாடம் தேவையில்லை அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் வராது என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஒதுக்காதீர்கள்.
மனப்பாடம் செய்ய....
கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை சூத்திரங்களை தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத் திருப்புதலின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த சூத்திரங்களை மனப்பாடமாக யாரிடமாவது ஒப்பித்து சரிபார்க்கவும். கட்டுரைகளை மனப்பாடம் செய்யும்போதே துணை தலைப்புகளை நன்கு நினைவில் பதித்துக் கொள்ளவும். தேர்வு நேரத்தில் கட்டுரை முழுவதையும் படிக்க முடியாமல் போகலாம். துணைத் தலைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனால்போதும் உள்ளே இருக்கும் சாராம்சம் நினைவுக்கு வந்துவிடும்.
கால நேர நிர்வாகம்
தேர்வு காலத்தில் நேர நிர்வாகம் முக்கியம். தேர்வு தேதிகள் தெரிந்தவுடன் மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்தெந்தப் பாடத்துக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றனவோ அந்த சப்ஜெக்ட்டுகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு இந்த சில மாத காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் இந்த சப்ஜெக்ட்டைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி நிச்சயம்.
பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கக் கையாள வேண்டிய 9 முறைகள்..!
தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவது பெற்றோரின் இயல்பே. ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. எனவே அதற்கான சில முக்கிய ஆலோசனைகளை இப்பதிப்பில் காணலாம்.. இவற்றை பெற்றோர்கள் முறையாக பின்பற்றினால் அவர்களின் விருப்பத்தை அவர்களது குழந்தைகள் நிறைவேற்றுவார்கள்.
1. தொலைக்காட்சி..
ஒரு வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில் படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். இந்த விதியை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம்.
2. தொலைபேசி..!
படிக்கும் நேரத்தில் வீட்டு தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறித்து ஒவ்வொரு பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். படிக்கும் நேரத்தில் அவசியமற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது தடை செய்யப்பட வேண்டும். மேலும் நேரம் காட்டும் கருவியை இணைத்து வைத்து நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கலாம். அதேசமயம் ஏதேனும் முக்கிய பாட விஷயங்களைப் பற்றியோ வீட்டுப்பாடம் பற்றியோ சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில் தங்களின் பிள்ளைகள் பேச வேண்டியிருந்தால் அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
3. அறை வசதி..!
வீட்டில் போதுமான வசதி இருந்தால் உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். அந்த அறை அழகாக இருக்கிறதா என்பதை காட்டிலும் போதுமான வசதியுடன் இருக்கிறாதா? என்பது தான் முக்கியம். மேலும் உங்களின் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேனா பென்சில் ரப்பர்உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
4. எழுத்து வேலைகள்..
இரவு நேரத்தில் குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். சில நாட்களில் பிள்ளைகள் பள்ளியிலிருந்து விரைவிலேயே வீடு வந்துவிட்டால் உணவுக்கு முன்பே வீட்டுப் பாடத்தை முடிக்க உதவலாம். மேலும் வேலைகளை முறையாக எழுதி வைத்துக் கொள்ள உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் எந்த குழப்பமும் வராது.
5. படிக்கும் நேர அளவு..!
உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று கவனியுங்கள். அதற்கேற்ப அவர்களுக்கு ஒவ்வொரு வேலையை முடித்த பிறகும் சிறிதுநேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
6. தேர்வு பயம்...
தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் மிக அதிகமாக இருக்கும். மேலும் தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண் விழித்து சிலர் படிப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை செய்வதை தவிர்த்து விடுதல் நலம். இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும்.
7. தேர்வு எழுதும் முறை..
கேள்வித் தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும் தெரியாத கேள்விகளை முதலில் தவிர்த்துவிட்டு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதி மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும் தேர்வு எழுதும் முன்பாக நன்றாக மூச்சை இழுத்துவிட்டு அமைதியுறுமாறும் உங்கள் குழந்தைகளிடம் தவறாமல் கூறவும். மேலும் விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக இட வேண்டும்.
8. வீட்டுப்பாடங்கள்..!
சில சமயங்களில் பெரியளவிலான வேலைகள் வீட்டுப்பாடமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் உங்களின் பிள்ளைகள் சோர்வடைந்து எதையும் செய்ய மனமின்றி இருப்பார். அந்த நேரத்தில் நீங்கள் பரிவுடன் நிலைமையை கவனித்து சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு இதைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும். மேலும் அசைன்மென்ட் தருவது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்துரையாட ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படி அந்த குறிப்பில் கேட்கலாம்.
9. அன்பால் அரவணையுங்கள்..!
உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். அந்த பாடத்தை முடிந்தால் நீங்களே நேரம் ஒதுக்கி சொல்லி தரலாம் அல்லது பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இது குறித்து பேசலாம்.
எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும் சாதுவான மற்றும் இயல்பான நிலையில் இருக்கும் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் படிப்பு விஷயத்தில் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சரியான முறையில் தீர்வு காண பெற்றோர் முயல வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.