எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கி இம்முகாமில் பேசியதாவது :-
தருமபுரி மாவட்டத்தில் மாதம் தோறும் ஒருநாள் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் வருகை தந்து அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்கவுரை ஆற்றியுள்ளார்கள். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பொது மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 192 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. உடனடியாக 53 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1,18,888 தனிநபர் கழிப்பறை தலாரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டி வழங்கிட ரூ.142.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம புறங்களில் உள்ள தாய்மார்கள் தனிநபர் கழிப்பறையை பயன்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். தனிநபர் கழிப்பறை பயன்படுத்துவதால் குழந்தைகள் தொற்று நோய் பரவாமல் பாதுகாக்கப் படுவார்கள். மேலும் கோடை காலங்களில் குடிநீர் மற்றும் இதரதேவைகளுக்காக தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் போது தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். இதனால் டெங்கு போன்ற கொசு புழுக்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கலாம். டெங்கு காய்ச்சல் பரவாமல் ஆரோக்கியத்துடன் வாழ மாவட்டத்திலுள்ள தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
வாரிசு சான்றிதழ்
முன்னதாக வருவாய்த் துறையின் சார்பில் பிறப்புச்சான்று 4 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 11 பயனாளிகளுக்கு ரூ.13 இலட்சத்து 20 ஆயிரமும், தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர உதவித்தொகையாக 6 பயனாளிகளுக்கு 3 இலட்சத்து 78 ஆயிரமும், வாரிசு சான்றிதழ் 3 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 15 பயனாளிகளுக்கு 79 ஆயிரத்து 500 மதிப்பிலும், பழங்குடியினர் சாதிசான்று 81 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 6 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 188 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 80 ஆயிரத்து 765 மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கினார்.
இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் பத்மாவதி, இணை இயக்குநர் வேளாண்மை சுசிலா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முத்தையன்,மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், உதவி இயக்குநர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர் பரமேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
ராகுல் நாளை கூடலூா் வருகை
11 Jan 2026நீலகிரி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு நாளை வருகை தரவுள்ளாா்.


