எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.15 - தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரிகள் வந்துள்ளது. இதை பரிசீலித்து வருகிறோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னையில் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மாலையில் தேர்தல் ஆணையர்கள் சகிதமாக குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலையில் தமிழகம் வந்தோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக 9 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக தங்கள் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எங்களிடம் தெரிவித்தார்கள்.
சில நாட்களாக வாகன சோதனை மூலம் முறைகேடாக கொண்டு செல்லும் பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சியினரும் திருப்தி தெரிவித்தார்கள்.
மேலும் இந்த நடவடிக்கையா தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின கீழ் அளிக்கப்படும் கூலித்தொகையுடன் ஓட்டுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதாக புகார் வந்துல்ளது. அதை கவனமாக பரிசீலித்து வருகிறோம்.
பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் கட்டமாக ஆணையர்கள், காவல்துறை தலைவர்கள், இணை ஆணையர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் , காவல் துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்த ஆலோசனையில் தேர்தல் நடைமுறைகள் சம்மந்தமாக கண்காணிப்பது வாக்களர்களுக்கு பணம் தருவதை தடுப்பது, போன்றவற்றை சம்மந்தமாக வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. வீடுவீடாக வாக்கு சீட்டு கொடுக்கும் பொழுது வாக்காளர்களுக்கு பணம் தருவது நடைபெறுகிறது என்ற புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காகன முயற்சி எடுக்கப்படும்.
பிரச்சார நேரத்தை 10 மணியிலிருந்து 11 மணியாக மாற்றுவது என்பது எங்கள் கையில் இல்லை. 10 மணி வரை பிரச்சாரம் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதை நாங்கள் மாற்ற முடியாது.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளை இனம்கண்டு உள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக வாக்காளர்களிடமிருந்து வரும் புகார்களை கவனத்தில் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் எங்களுக்கு உற்ற நண்பன். நீங்கள்தான் அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் வரை இடைபட்ட 1 மாத காலத்திற்கு வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மத்திய துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வெளியேயும், உட்புறமும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் முடிந்து வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து கணக்குகளும் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் தனியாக தேர்தல் செலவுக்கு என்று தனியாக வங்கிக்கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக பரிவர்த்தனை முகவர்களை நியமித்துக் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குபதிவு நடத்துவதற்கு காரணம் மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதில்லை. கடந்த காலங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய வரலாறுகள் எதுவும் இல்லை. அமைதியான வாக்குப்பதிவு நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் உள்ளதுபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவம் தமிழகத்தில் இல்லை.
மேலும், கடந்த சில கூட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. சில இடங்களில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அது சம்மந்தமாக பரிசீலித்து வருகிறோம். தனியாக விசாரணை நடத்துவோம்.
எம்.பி.க்களில் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்திய விஷயத்தில் எங்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்காது. இந்த தேர்தலில் அமைதியான தேர்தலை நடத்த வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை, பின்பற்ற அனைத்துக் கட்சிகளும் உரிதி அளித்துள்ளனர். பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் விதிமுறைகளை மீறியது சம்மந்தமாக ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் அழகிரி தான் தேர்தல் தேர்தல் விதிமுறைகளளை மீறியது சம்மந்தமாக வருத்தம் தெரிவித்து இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்படுவதாக (காவல்துறை தலைவர் லத்திகா சரண், உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி சாபர்சேட், மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்து ) அ.தி.மு.க. சார்பில் புகார்கள் வந்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
பேட்டியின்போது தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் அதிகாரி அமுதா, கூடுதல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.